விஷ்ணு புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
இகவுமதி ஆற்றின் கரையில் கபில முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒருநாள் செளபிர என்ற அரசன் ஞானம் பற்றித் தெரிந்து கொள்ளப் பல்லக்கில் ஏறி, கபில முனிவரை தரிசிக்கச் சென்றான். பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவன் குறைந்ததால் அழுக்கு உடம்புடன் இருந்த இந்த பிராமணனைப் பல்லக்குத் தூக்கும்படி செய்தான்.
பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் வேகமாக செல்லவும், பரதன் மட்டும் சற்று மெதுவாக நடந்ததால் பல்லக்கு ஒரே சீராக நகர முடியவில்லை. இதனால் பரதனை மற்றவர்கள் கோபித்தனர். கோபம் கொண்ட அரசன் மிகுந்த பலமுடைய வனாகத் தோற்றமளிக்கும் நீ சிறிது தூரம் பல்லக்கை சுமந்து வந்ததில் எப்படிக் களைப்புற்றாய்?’ என்று கேட்டான். அதற்கு பரதன், 'பல்லக்கை நான் சுமக்கவில்லை, எனக்குக் களைப்பும் இல்லை, நான் பலமுடையவனும் அல்ல' என்றான். இதைக்கேட்ட அரசன் வியப்போடு, நீ பல்லக்கை சுமந்து செல்கிறாய், நீ பலமுள்ளவனாக இருக்கிறாய். இதை எப்படி மறுக்க முடியும்?' என்றான்.
பரதன் பதில் கூறத் துவங்கினான், “நான் யார்? நீ யார், நீ பார்த்தது என்னுடைய உடம்பும், உன்னுடைய உடம்புமே. நான் என்பது என் உடம்பும் அல்ல. நீ என்பது உன் உடம்பும் அல்ல. நம்முடைய ஆத்மாதான் நாம் யார் என்பதை அறிவிக்கும். அந்த ஆத்மாவிற்குக் களைப்போ, பலமோ எதுவு மில்லை. அந்த ஆத்மா பல்லக்கைத் தூக்கிச் சுமப்பதும் இல்லை! - இதைச் சொல்லிவிட்டு பரதன் அமைதியாகி விட்டான். வியப்படைந்த அரசன் கீழே இறங்கி அந்த பிராமணனை விழுந்து வணங்கினான். இவ்வளவு ஞானம் பெற்ற இந்த மனிதன் யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பினான் அரசன். உடனே பரதன் ஆத்மாவைப் பற்றிக் கூறினான். ஒவ்வொரு பிறப்பிலும் ஒர் உடம்பிலிருந்து மறு உடம்பிற்குச் செல்லுகின்ற இந்த ஆத்மாவிற்கு அழிவே கிடையாது. இதுவே ஜீவாத்மா எனப்படும். எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளாகிய விஷ்ணுவே பரமாத்மா எனப் படுபவர். முழுமையான ஞானம் பெற்றவனுக்கு ஜீவாத்மா விற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. மாயையில் அகப்பட்டிருப்பவனுக்கே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுபட்ட பொருள்களாகத் தெரியும். பரதன் ஒரு கதையையும் அரசனுக்குக் கூறினான். பல ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மனின் மகனாகிய ரிபுவும், ரிபுவின் சீடனும் புலத்தியனின் மகனுமான நிடகாவும் தேவிகா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள விராநகரா என்னுமிடத்தில் வசித்தனர். பரப் பிரம்மம் பற்றி அறிந்து கொள்வதற்குத் தயாராக இல்லாத காரணத்தால் நிடகாவை ஊருக்குள் சென்று வசிக்கும்படி கூறினான் ரிபு. ஒருநாள் தன் சீடனாகிய நிடகாவைக் காணச் சென்றான் ரிபு. தன்னைக் காணவந்த தன் ஆசிரியனை உண்ண அழைத்தான், நிடகா. அவனைப் பார்த்து ரிபு என்ன உணவு படைக்கப் போகிறாய்? தூய்மையானதா?’ என்றான். அதற்கு நிடகா அரிசி, பழங்கள் மற்றும் இனிப்புகள் இருப்பதாகக் கூறினான். இது அசுத்தமான உணவு. அரிசியில் செய்யப் பட்ட உணவு. மற்றும் தயிர் கொடுக்குமாறு கூறினான் ரிபு. ரிபு உணவு உண்டபின் தன் ஆசிரியனைப் பார்த்துப் பசி அடங்கிவிட்டதா என்றும், இங்கு எதற்காக வந்தீர்கள் என்றும் கேட்ட நிடகாவைப் பார்த்து, "பசியோடு இருப்ப வர்களுக்கே உணவு உண்டபின் பசி அடங்கிவிடும். எனக்குப் பசியில்லை. அதனால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. உடம்பிற்குதான் பசி எடுக்கும். நான் உடம்பல்ல. நான் எங்குச் செல்கிறேன் என்று வினவினாய். என்னுடைய ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது. நீ காணும் நான் நானல்ல. நீ நீயல்ல.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 6 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பரதன், நான், கூறினான், அரசன், ரிபு, உணவு, யார், ஞானம், அந்த, என்றான், பல்லக்கை, அல்ல, உடம்பும்