விஷ்ணு புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள்
பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.
ஜடபரதன் கதை
முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது.
தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 5 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரகலாதன், பரதன், கடந்து, உள்ள, துருவ, உலகம், மான், உலகங்கள், உலகங்களையும், உள்ளது