வாமன புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
வானத்தில் தங்கிய சிவனுடைய பாகம் மேஷத்தில் தலையும், ரிஷபத்தில் முகமும், மிதுனத்தில் தோள்களும், சிம்மத்தில் இதயமும், கடகத்தில் இரு பக்கங்களும், கன்னியின் வயிறும், துலாத்தில் கொப்பூழும், விருச்சிகத்தில் இடுப்பும், தனுசுவில் தொடையும், மகரத்தில் கால்களும், கும்பத்தில் கணுக்கால்களும், மீனத்தில் பாதங்களும் இடம் பெற்றன. இதுவே வான் மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு வீடுகளும் பிறந்த கதையாகும்.
மன்மத தகனம்
வெகு காலத்திற்கு முன்னர், நேர்மையான விவ்ரிசா என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அஹிம்சா என்ற மனைவியும், ஹரி, கிருஷ்ணா, நர, நாராயண என்ற நான்கு மகன்களும் முனிவர்களாகி தவத்தில் ஈடுபட்டனர். இமயமலையில் உள்ள வதரிகாசிரமத்தில் பர்ணசாலை அமைத்துத் தவம் செய்தனர். இவர்கள் கடுமையாகத் தவம் செய்வதை அறிந்த இந்திரன் தன்னுடைய இந்திரப்பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி, அவர்கள் தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா என்ற அப்ஸரஸையும், மதனா என்பவரையும் அனுப்பிவைத்தார்.
இவர்கள் இருவரும் வதரிகாசிரமம் அடைந்த பொழுது, அங்கு பருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. மலர்கள் மலர்ந்தன, கொடிகள் செழுமையாக வளர்ந்தன. தன் தவம் கலைந்த நாராயண முனிவர் வியப்புடன் இவற்றைப் பார்த்துவிட்டு, அனங்கனைப் பார்த்தார். அனங்கன் என்று சொன்னது யாரை?’ என்று நாரதர், புலஸ்தியரைக் கேட்க, அவன்தான் மதன் என்றும், காமன், கந்தர்வன் என்றும் அனங்கன் என்றும் அழைக்கப்படும் காதலுக்குத் தேவனவன் என்று புலஸ்தியர் கூற, அனங்கன் என்று ஏன் பெயர் வந்தது என்று நாரதர் கேட்க, 'அவன் சிவனால் எரிக்கப்பட்டான்' என்று விடையளித்தான் புலஸ்தியன். சிவன் அவனை எரித்த வரலாற்றையும் கூறத் தொடங்கினார்.
தட்சயக்ளுத்தைக் கேள்விப்பட்டு சதி உயிரை விட்டதில் இருந்து சிவன், சதியைப் பிரிந்த துயரத்தில் மிகவும் ஆழ்ந்து போனார். சில நேரம் நாட்டியமாடியும், சில நேரம் ‘ஓ’ என்று குமுறியும் மனநிம்மதியின்றி அலைந்தார். பிரிவினால் ஏற்பட்ட துடு மிகுதிப்பட்டமையில் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று நீராடத் தொடங்கினார். காளிந்தி நதியில் அவர் நீராட இறங்கியதும் அந்த நதியின் நீரே கருமையாக மாறியது. அப்பொழுது முதல் சிவனுக்கு ஏப்பம் அதிக சப்தத்துடன் வரலாயிற்று. அதை அடக்க முடியாத சிவன் ஏப்பமிட்டுக் கொண்டே இங்குமங்கும் அலைந்தார். வழியில் குபேரன் மகனாகிய பாஞ்சலிகாவைக் கண்டு, என்னுடைய ஏப்பத்தை நீ வாங்கிக் கொண்டால் உன்னை வாழ்த்துவேன் என்றார். அவன் அதனை வாங்கிக் கொண்டதால் அவன் பாஞ்சாலேஸ்வரன் என்று வணங்கப்பட்டான். அதன் பிறகு சிவன் விந்திய மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே தவம் செய்து கொண் டிருக்கும் பொழுது திடீரென்று அடி, முடி காண முடியாத லிங்க வடிவை எடுத்தார். அதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சியும், பூகம்பமும், மிகவும் அஞ்சத்தக்கனவாக இருந்தன. இதைக் கண்டு அஞ்சிய பிரம்மன் விஷ்ணுவிடம் சென்று அதிர்ச்சியின் காரணம் கேட்டார். விஷ்ணு, சிவன் விந்திய மலைப் பிரதேசத்தில் லிங்க வடிவெடுத்ததன் விளைவாகும் இது என்று கூறினார். இருவரும் விந்திய மலைக்கு வந்து சிவன் நின்ற காட்சி கண்டனர். லிங்கத்தின் முடி கற்பனைக்கடங்காத உயரத்தில்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 3 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், ஆகாயத்தில், தவம், விந்திய, அவன், அனங்கன், சாலையில், என்றும்