வாமன புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
பிரகலாதனும், அந்தகனும் அண்ணன்-தம்பி மக்கள். ஹிரண்யாக்ஷன் மகன் அந்தகாசுரன். ஹிரண்யகசிபு மகன் பிரகலாதன். அந்தகன் முதலில் குருடனாக இருந்தாலும் பிறகு கண்களைப் பெற்று பிரகலாதன் கொடுத்த ஆட்சியை மேற்கொண்டான். அவன் பெரிய சிவபக்தன். ஆதலால் ஆட்சிக்கு வந்தவுடன் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்து தேவர்கள், அசுரர்கள் ஆகிய யாராலும் தனக்குச் சாவு வரக்கூடாது என்றும், பூமியிலோ, நெருப்பிலோ தனக்கு இறப்பு வரக்கூடாது என்றும் பல வரங்களைப் பெற்று ஆளத் தொடங்கினான். வரங்களைப் பெற்ற தைரியத்தில், இந்திரனை ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பிரோச்சனன் என்னும் படைத் தலைவனுடன் போருக்குப் புறப்பட்டான். இவன் வருவதை அறிந்த இந்திரன் தேவர்கள் படையை வரிசைப்படுத்தி நிறுத்தினான். இந்திரன் ஐராவதத்தின் மேலும், யமன் ஒரு எருமை மேலும், வருணன் கடற்பன்றி மேலும், கந்தர்வர்கள் நாகங்களின் மேலும், ருத்ரர்கள் வெள்ளைநிறக் காளைகள் மேலும், ஆதித்தியர்கள் குதிரைகள் மேலும், மருத்துக்கள் மான்களின் மேலும் ஏறிவந்தனர். சந்திரன் அன்னங்கள் பூட்டிய ரதத்தில் வந்தான்.
அந்தகன் குதிரை மேலும், விரோச்சனன் யானை மேலும், அயாசங்கு என்பவன் சிங்கத்தின் மேலும் வந்தனர். போர் தொடங்கியது. இந்திரன் முதலியவர்கள் அடி பொறுக்காமல் ஒடத் தொடங்கினர். விரைவில் தேவருலகம் அந்தகன் வசமாயிற்று. அந்தகன் தலைநகரம் அஷ்மகா எனப்படுவதாகும்.
மகிஷாசுரன்
முன்னொரு காலத்தில் ரம்பன், கரம்பன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்து கொண்டு மூன்று உலகத்திற்கும் பெருந் தீமை புரிந்து வந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற பெருங்கவலை இருந்து வந்தது. இருவரும் தவம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கரம்பன் என்பவன் தண்ணிருக்கு அடியில் சென்று தவம் செய்தான். அதனை அறிந்த இந்திரன் முதலை வடிவில் சென்று கரம்பனை விழுங்கிவிட்டான். தம்பி இறந்ததை அறிந்த ரம்பன் இந்திரன் மேல் கடுங்கோபம் கொண்டான். இந்திரனை அழிக்கக் கூடிய ஒரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினான். தவம் செய்தான். தவத்தின் முடிவில் யாரும் வராததால் தன் தலையை அறுத்து அக்னிக் குண்டத்தில் போடுவதற்காகக் கையில் வாளை எடுத்து விட்டான். உடனே அக்னி தேவன் அவன் முன் தோன்றி, "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். உனக்கு வேண்டிய வரத்தைத் தருகிறேன்” என்று கூறியவுடன் ரம்பன் "எனக்கு ஒரு மகன் வேண்டும். மூன்று உலகத்தையும் வெல்பவனாகவும் மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் யாராலும் கொல்லப் படாதவனாகவும் இருக்க வேண்டும்.” என்றான். அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு அக்னி மறைந்தான்.
சிலகாலம் கழித்து ரம்பன் குபேரன் வாழும் இடத்திற்குச் சென்றான். யக்ஷினிகள் வாழும் உலகில் ஒர் அழகான பெண் எருமையைப் பார்த்து அதன் மேல் மோகம் கொண்டு அந்த எருமையை மணம் செய்து கொண்டான்.
எருமை மனைவியை அழைத்துக் கொண்டு அசுரர் உலகத்திற்கு வந்தபோது அங்கு அந்த எருமை மனைவியை யாரும் மதிக்கவில்லை. அதனால் வருத்தம் அடைந்த ரம்பன் எருமை மனைவியை அழைத்துக் கொண்டு யகதினி உலகத்திற்கே சென்றுவிட்டான். அங்கே அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மகிஷாசுரன் என்று பெயரிட்டனர். சிலகாலம் கழித்து மகிஷாசுரனின் தாய் எருமை மற்றொரு எருமையுடன் சண்டை செய்ய நேரிட்டது. தன்னுடைய மனைவியைக் காப்பாற்றச் சென்ற ரம்பன் மற்றொரு எருமையால் குத்திக் கொல்லப்பட்டான். இறந்து போன ரம்பனுடைய உடம்பு எரிகின்ற சிதையின் மேல் அவனுடைய மனைவியாகிய பெண் எருமையும் விழுந்து இறந்தது. அந்தச் சிதை நெருப்பில் இருந்து மிகக் கொடுமையான இரக்கவிஜா என்ற ஒர் அசுரன் தோன்றினான். அவன் சுற்றி இருந்த யக்ஷினிகள், எருமைகள் ஆகியவர்கள் அனைவரையும் கொன்று விட்டான். அவனுடைய பாதுகாவலில் வளர்ந்த
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 6 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மேலும், ரம்பன், அந்தகன், எருமை, வேண்டும், இந்திரன், கொண்டு, தவம், மேல், மனைவியை, இருந்து, மகன், தேவர்கள், செய்து, அவன், அறிந்த