ஸ்கந்த புராணம் - பகுதி 20 - பதினெண் புராணங்கள்
சிறிது நேரம் கழித்து அசோகன் முதுகில் சூடான இரண்டு சொட்டு இரத்தம் விழுந்தவுடன் திடீரென்று நிமிர்ந்து பார்த்தான். வந்தவள் பெண்ணல்ல என்பதும், ஒரு பேய் என்பதும், கழுமரத்தில் தொங்குபவனுடைய சதைகளைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்ததைக் கண்டான். தன் வலுவான கைகளால், கொலுசு அணிந்திருந்த அப் பெண்ணின் காலைப் பிடித்து இழுத்தான். அப்பெண் பேய், காலில் இருந்த கொலுசை இவன் கைகளில் விட்டுவிட்டு தழுவி விட்டது. கொலுசுடன் சென்று, துரத்தில் நின்ற மன்னனைக் கண்டு நடந்தவற்றை விவரித்தான் அசோகன். மிக்க மகிழ்ச்சி அடைந்த மன்னன் அசோகனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தான். அந்த ஒற்றைக் கொலுசு, தேவலோக வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்ததால் அது போன்று மற்றொரு கொலுசை அடைய மன்னன் விரும்பினான். அசோகன் அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்தான். நிணம், சதைத் துண்டங்கள், இரத்தம் என்பவற்றை நிரம்ப எடுத்துக் கொண்டு, சுடுகாட்டிற்குச் சென்று மந்திரங்களை உச்சரித்து, பேய்கள், பிசாசுகள், வேதாளங்கள் ஆகியவற்றை விளித்து, இங்கே வந்து இவற்றை உண்ணுங்கள் என்று கூவினான். உடனே பேய் பிசாசுக் கூட்டம் அங்கே வந்தது. ஒரு சில பிசாசுகளுக்கு வேண்டுமானதைக் கொடுத்தபின், எதிரே ஒரு பெண் பிசாசு இருப்பதைக் கண்டான். அந்தப் பிசாசை விளித்து, நீ மற்றொரு கொலுசைக் கொடுப்பதானால் இங்குள்ள அனைத்தையும் உனக்குத் தருவேன்’ என்றான். அப்பிசாசு மற்றொரு கொலுசையும் தந்தது. அதனுடன், இங்கே நிற்பவள் வித்யுத்பிரபா என்னும் என் மகள் ஆவாள். இவளையும், இந்தப் பொன்னாலான தாமரையையும் எடுத்துச் செல்' என்றது. மன்னனிடம் கொலுசைக் கொடுத்து விட்டு, வித்யுத்பிரபாவை மணந்து கொண்டான்.
சில காலம் கழித்து, இரண்டாவது மனைவியைப் பார்த்து அசோகன் உன் தாய் எங்கிருந்து இந்தப் பொற்றாமரையைப் பெற்றாள் என்றான். அவள் அந்த இடத்தைக் காட்டுகிறேன் என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு ஒரு குளத்திற்குச் சென்றாள். கபாலசவோதனன் ஆட்சிக்குட்பட்ட இக் குளத்தில்தான் அத்தாமரைகள் உள்ளன என்றாள். அசோகன் பல தாமரைகளைப் பறித்தான். அவனைத் தடுக்க வந்த பிசாசுகளைக் கொன்றான். குளத்திற்குக் காவலாக இருந்த கபாலசவோதனாவைக் கொல்ல முயல்கையில், வித்யாதர மன்னன் தோன்றி, அசோகனே, நில். அந்த வேதாளம் பூர்வத்தில் உன் சகோதரன் விஜயனாக இருந்தவன். அவனை விட்டுவிடு. உன்னுடைய சாபம் நீங்கி விட்டதால் நீ வித்யாதரனாக மாறி என்னுடன் தேவலோகம் வந்து விடு' என்றான்.
அதைக் கேட்ட அசோகன், அரசே! தேவலோகம் வர ஆசையில்லை. அப்படிப் போவதாக இருந்தால் என் சகோதரனையும் வித்யாதரனாக மாற்றிப் பிறகு இருவரும் வருவோம்’ என்றான். உடனே வித்யாதர மன்னன், நீங்கள் இருவரும் ராமேஸ்வரம் சென்று, சக்கர தீர்த்தம் பக்கத்தில் குளித்தால் உன் சகோதரனின் சாபம் நீங்கி, அவனும் வித்யாதரன் ஆவான்’ என்று கூறினான். அசோகன் வேதாளத்தை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் சென்றான். சக்கர தீர்த்தத்தின் திவலைகள் வேதாளத்தின் மேலே பட்டவுடன் அவன் பழைய விஜயனாக மாறி, தேவலோகம் சென்றனர்.
தர்மாரண்யத்தின் கதை
வேதவியாசர் பாண்டவர்களில் மூத்தவனாகிய யுதிஷ்டிரனுக்குப் பின்வரும் கதையைச் சொன்னார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 20 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அசோகன், மன்னன், என்றான், தேவலோகம், கொண்டு, அந்த, பேய், சென்று, மற்றொரு