புதுக் கவிதைகள் - மனகதவு
- T. ஸ்ரீரெங்கராஜா கண்ணைத் திறந்தேன் காட்சி கிடைத்தது செவியைத் திறந்தேன் சங்கீதம் நுழைந்தது ஜன்னலைத் திறந்தேன் காற்று நுழைந்தது விளக்கை ஏற்றினேன் வெளிச்சம் வந்தது விதையை விதைத்தேன் விளைச்சல் தந்தது பேனாவைத் திறந்தேன் புதுக்கவிதை பிறந்தது மனதைத் திறந்தேன் யாரும் நுழையவில்லை. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனகதவு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - திறந்தேன்