புதுக் கவிதைகள் - விருப்பமில்லா வாழ்க்கை
- கண்ணா காந்தி ( கல்வி அறிவில்லா, கை நடுங்கும் முதியோரின் நெஞ்சில் முளைத்த நெருஞ்சி முள். இது கீரி கொடுக்கும் அர்த்தம் ஆழம் மிகுந்தது. ) தினமும் எழுதுகிறேன் காலையிலே, என் வாழ்க்கை என்றும் வறுமையிலே, சோகத்தால் ஆனது என் உடம்பு, என்னுள் மிஞ்சியது வெறும் எலும்பு. அரசு அறிவிக்கும் அதிரடித் திட்டம், என்னை வந்து இன்னும் சேரவில்லை, பணம் இருக்கும் இடத்திற்கு அதுவே, பறந்து சென்றதா? என தெரியவில்லை. ஆட்சி மாறிடும் வேளையிலும், என் அவலம் மாறா இருப்பதேன்? அன்னமில்லா என் கைகள் மகிழ்ச்சியை விருந்திற்கு அழைப்பதேன்? ஆடையில் கரையிருந்தால் மறைத்து கொள்வேன், மனதில் கரையிருந்தால் மாய்த்து கொள்வேன். ஆனால், உடலே கரையாய் இருக்கும் போது - என்னை எங்கே மறைப்பது? - இன்னும் அறியேன். காய்ச்சிய கஞ்சி கறைந்து போனது, என் குடலும் மக்கி சிதைந்து போனது, இன்னும் உயிர்தான் இருக்கிறது. அதுவும் உடலை துளைக்கிறது. பட்டினி சாவுகளோ ஏராளம், அவர்கள் படும்பாடு மிக கேவலம், வறுமை பட்டியல் நீள்கிறதே, அதில் என் பெயர் முன்னின்று வருகிறதே. தேர்தல் வந்தால் நாடகங்கள் அரங்கேறும், அப்போதான் என் கண்கள் குளிர்ச்சியாகும். பார்க்கும் இடமெல்லாம் பரிவட்டம், பங்காளி சண்டையில ஒரு கூட்டம், ஆடி முடியுதய்யா அவங்க ஆட்டம், மறுபடியும் எங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டம். இவ்வளவும் நடக்குது பாரத நாட்டுல என் வாழ்க்கைக்கு இன்னும் விடை காணல, வாழ்க்கைய முடிச்சுக்கிறேன் இந்த நேரமே, அடிமையாய் இருந்தேன் நான் ரொம்ப காலமே நல்லா இருக்கட்டும் நம்ம நாடு மறுபடியும் அடிமையில்லாமல் இருந்தா அதுவே பெரும் பாடு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருப்பமில்லா வாழ்க்கை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - இன்னும்