புதுக் கவிதைகள் - மழையும் என் மனசும்!

- மு. கார்த்திக் சுகமாய் மேகம் சுமந்து சுற்றித் திரிவதை விட்டு என்னைச் சுண்டியிழுக்கவே வந்தாயோ - மழையே! மண்ணுடன் பல்லாங்குழி! என்னுடன் பெண்மைத் தீண்டலா? என்ன சொல்லி அனுப்பினான் வருணன் - மண்ணுடன் காதல் சொல்லவா - என்னுடன் தேடல் கொள்ளவா? வா! என் வீட்டு சன்னல்களில் சிறையாய்க் கம்பிகள் இல்லை! உனக்குத் தெரியும் - மழைக்கும் சிறையிட விரும்பாதவன் நான்! மழைக்குச் சிறையிட விரும்பாத என் மனதோடு மாத்திரம் சொல்! என்னைப்போல் எத்தனைபேருக்கு ஒவ்வொரு மழையின் போதும் மழைத்துளிகழுடன் கவிதைகளையும் கொண்டு வருகிறாய்? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மழையும் என் மனசும்! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -