புதுக் கவிதைகள் - உனக்குள் மோட்சம்

- ஞா. குருசாமி சுடிதார் மாற்றி சேலை கட்ட சொர்க்கம் பிறக்குது! - நீ கடித்த கனியைச் சுவைத்த பின்பு கரும்பு கசக்குது! இடையை நெளித்து நடக்கும் போது இதயம் நொறுங்குது! - உன் நடையைப் பார்த்த எந்தன் கண்கள் நடுங்கி மயங்குது! வட்டத் தோசை முகமும் உனக்கு அழகைக் கொடுக்குது! - நீ கிட்ட வந்து தொட்டு இழுத்தால் கிறுக்குப் பிடிக்குது! உதட்டில் தீட்டும் சிவப்புச் சாயம் உயிரைப் பிடுங்குது! - உன் உதட்டைப் பிழிந்த எந்தன் உதடு உருகி வடியுது! அன்பே உந்தன் நிழலும் கூட அழகாய் இருக்குது! - அது கண்ணைச் சிமிட்டி என்னை அழைத்து கவிதை படிக்குது! நெஞ்சைத் தழுவும் முத்து மாலை நித்தம் மகிழுது! - அது கொஞ்சிப் பேச என்னை முழுதும் கொள்ளை அடிக்குது! மின்னும் வளையல் சத்தம் எழுப்பி மேளம் இசைக்குது! - உன் முன்னால் நானும் நிற்கும் போது மூச்சுத் திணறுது! முத்த எச்சில் ஈரந் தன்னில் மோகம் பிறக்குது! - உன் முத்துப் பற்கள் என்னைத் தீண்ட மோட்சம் கிடைக்குது! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்குள் மோட்சம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -