புதுக் கவிதைகள் - சொல்லில் எழுத்தில்...
- சாப்டூர் சதுரகிரியான் எழுத்தும் அசையும் தெரியாமல் எழுதுவ தெல்லாம் கவிதையென்று அழுத்தம் திருத்த மாய்ச் சொல்லி ஆணவ மாகச் சிரிக்கின்றார்! புழுத்த சொற்கள் சேர்த்து நீட்டிப் புத்தம் புதிய கவிதையென்றே எழுத்தில் எழுதித் தள்ளுகின்றார், எதுகை மோனை இல்லாமல்! செய்யும் தொழிலின் நுட்பத்தைச் சீராய்க் கற்றுத் தெளிதல்போல்; நெய்யும் ஆடை நெசவுதனை நேராய்க் கற்று அறிதல் போல்; பெய்யும் மழையை ஆராய்ந்தே பெய்யச் செய்தல் போல், கவிதை செய்ய முனைவோர் இலக்கணத்தைச் சீராய்க் கற்றே எழுதினாலென்? கல்வி தன்னில் சிறந்தோரும் கல்லார் போல இலக்கணத்தைத் தள்ளிவிட்டுத் தாறுமாறாய்த் தமிழைக் கொல்லும் செயல் செய்தே துள்ளிக் குதித்து மகிழ்கின்றார்! தூய தமிழன் தானென்றும் சொல்லி மகிழ்ந்து போகின்றார்! சொல்லில் எழுத்தில் இருந்தாலென்? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொல்லில் எழுத்தில்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -