புதுக் கவிதைகள் - விழித்துக் கொள் இளைஞனே!
- ஏ. மாடசாமி என் இளைஞனே..... எண்ணத்தில் எவளைப் பதித்து கன்னத்தில் தாடி வளர்த்தாய்? தாடிக்குள் இருக்கிறது ஆயிரம் சங்கதி! அது காதல் தோல்வியெனில் கேவலம் உன் கதி! காதலிக்கும் முன் கற்றுக்கொள்! கண்ணீர் விடுவோமென்று! நேசிக்கும் முன் கற்றுக்கொள்! மறந்து விடுவாளென்று! வெற்றிக்கு முன் கற்றுக்கொள்! தோல்வி வருமென்று! லட்சியத்திற்கு தாடி வை! லட்சணத்திற்கு தாடி வை! ஏன்? நாடித் தேமலை மூடி மறைக்கக் கூட தாடி வைத்துக் கொள் தப்பில்லை! காதலில் தோல்வி என்று மட்டும் தாடி வளர்க்காதே! நீ தத்துவம் பேசி ஞானியாக வேண்டாம் போதனை செய்து புத்தனாக வேண்டாம்! நாட்டுக்காக உயிர் கொடுத்து தியாகியாகக் கூட வேண்டாம்! உன் உள்ளத்தில் சம்மணமிட்டிருக்கும் காதல் தோல்வியை மட்டும் விரட்டு! நீ காதலித்தவள் என்ன இவ்வுலகின் கடைசிப் பெண்ணா? காதல் என்பது அன்பைக் குறிக்கும் பொதுச் சொல்! அது எப்படி தோல்வியாகும் பதில் சொல்! நீ வளர்க்கும் தாடி உன் இன்பத்தின் விரோதி! அட பைத்தியக்காரனே.... இன்னும் நீ அந்தத் தாடியில் ஆசை வைத்திருந்தால் தேவையில்லாத உன் மீசையை மட்டும் எடுத்து விடு! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழித்துக் கொள் இளைஞனே! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - தாடி, வேண்டாம், மட்டும், முன், காதல், கற்றுக்கொள்