முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 185
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 185
மாகக் குதித்து நீந்தத் தொடங்குவார்கள். தங்கள் நாட்டுக் கலைஞர்கள் செய்த இணையற்ற சிலைகளைத் தோற்கடிக்கும் உருவமும், அந்தப் பளிங்குச் சிலைகளைப் போலவே கற்பூர வெண்ணிறமும் உச்சியிலே செம்பட்டைத் தலைமயிரும் படைத்த கிரேக்க யுவதிகளும், நீலநிறக் கூந்தலையும் பொன்னிறக் கண்களையும் பெற்றிருந்தாலும், அந்தக் கிரேக்க யுவதிகளை விடச் சிறிதும் குறையாத கோதுமை நிறமும், நிலையற்று அலையும் மருண்ட விழிகளால் யாரையும் கவரும் சக்தியும் படைத்த வைசியப் பெண்களும் நீச்சுப் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராய் நின்றனர். யுவதிகளைப் போலவே பல குலத்தையும் சேர்ந்த யுவர்களும் தங்களுடைய உடைகளைக்
களைந்துவிட்டு நதியிலே குதிக்கத் தயாராய் நின்றனர். தேகப் பயிற்சியால் உருண்டு திரண்ட அழகிய சரீரமும், கம்பீரமான தோற்றமும் உடைய அந்த வாலிபக் கூட்டத்திலே, நிறமும், மயிரும், மூக்கும், முகமும் அவர்களின் குலங்களைப் பிரித்துக் காட்டின; சாகேத நகரத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் இளமையின் எழில் ராசி திரட்டிக் கொண்டு வந்து நதிக்கரையிலே குவிக்கப்பட்டிருந்தது. யுவ-யுவதிகளின் அழகை எடைபோட்டு நிர்ணயிப்பதற்கு, இந்த நீச்சு விழாவை விடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்க மாட்டாது. வருடந்தோறும் இந்த விழாவிலே, அநேக ஜோடிகள் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்வதுண்டு. தாய் தந்தையர்களும் இதற்கு விருப்பத்தோடு தூண்டுவார்கள். அந்தக் காலத்திலே இது நல்லொழுக்கமாகவே கருதப்பட்டது.
படகின் மூலம் சரயூவின் எதிர்க்கரையை அடைந்து, யுவர்களும் யுவதிகளும் தண்ணீரில் குதித்தார்கள். சரயூவின் நீலநிறத் தண்ணீரிலே தங்களுடைய பொன் நிற, நீலநிற, கருநிறக் கூந்தல்கள் அலைய, பலம் மிகுந்த தோள்களால் தண்ணீரை ஒதுக்கிக் கொண்டு வேகமாக நீந்தினார்கள். அவர்களுக்கு இருபுறமும், உதவிப் படகுகளில் இருந்த ஆண்களும் பெண்களும் அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், வழியிலே களைத்து விட்டவர்களைப் படகில் தூக்கிப் போட்டுக் கொண்டும், ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டும் வந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் போட்டி போடும் போது, ஒரு சிலர் தோல்வியை ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்படுவது
இயற்கையே. நீந்துகிற ஒவ்வொருவரும் தாங்கள் ஜெயித்து விட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். கரை இன்னும் மூன்றிலொரு பங்கு தூரத்தில் இருக்கும் பொழுது அநேகர் களைத்து விட்டனர். சிறிது நேரத்தில் இரண்டு உருவங்கள் மட்டும் கரையை நோக்கி வேகமாக நீந்திச் செல்வது தெரிந்தது. ஒன்றின் கூந்தல் பொன்னிறம்; மற்றது சாம்பல் நிறம். கரையை நெருங்க, நெருங்க இருவரின் வேகமும் அதிகரித்தது. ஆயினும் ஒருவரையொருவர் முந்த முடியவில்லை. எல்லோருடைய கவனமும் அந்த இரு உருவங்களிடமும் சென்று லயித்தது. கரையை நெருங்குவதற்குள் அவர்களில் யாராவது ஒருவர் முந்தி ஜெயித்து விடுவார்கள் என்று எல்லோரும் நினைத்தனர். பலரும் கூச்சலிட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர். ஆயினும் இருவரும் ஒன்றாகவே கரையேற முடிந்தது. அவர்களிலே ஒருவர் ஆண்; மற்றவர் பெண். ஜனங்கள் ஆனந்தக் கூச்சலிட்டு அவர்களை வரவேற்றனர். இருவரும் துணிகளை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 183 | 184 | 185 | 186 | 187 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரையை, கொண்டும், அவர்களை - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்