முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 183
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 183
பிரபா
காலம் : கி.பி. 50
சாகேதம் (அயோத்யா) நகரம் எப்பொழுதும் ஒரு தலைநகரமாக இருந்ததே இல்லை. கௌதம புத்தருடைய சக காலத்தவனாக கோசல நாட்டு அரசன் பிரசேனஜித்தன், அங்கு ஒரு மாளிகை கட்டியிருந்தான் என்றாலும், அவனுடைய ராஜதானி அங்கிருந்து 60, 70 மைல் தூரத்தில் உள்ள ஸிராவஸ்தி நகரம்தான். பிரசேனஜித்தனுடைய மாப்பிள்ளை அஜாதசத்ரு கோசலத்தின் சுதந்திரத்தை விழுங்கிவிட்ட பிறகு, அந்த ஸிராவஸ்தியின் பெருமையும் மங்கிவிட்டது. ஆனால், சரயூ நதிக்கரையில் அமைந்துள்ள இந்த சாகேத நகரம் படகு வியாபாரத்தினால் மட்டுமல்ல, கிழக்கிலிருந்து பாஞ்சாலம் செல்லும் தரை மார்க்கத்தின் மத்தியில் அமைந்திருப்பதால், தரை வியாபாரத்திற்கும் ஒரு கேந்திர ஸ்தானமாக விளங்கியது. இந்த வியாபார முக்கியத்துவத்தை அது நெடுங்காலம் வகித்து வந்தது. சாணக்கியனுடைய சிஷ்யன் சந்திரகுப்த மௌரியன் மகத ராஜ்யத்தை முதலிலே தட்சசீலம் வரைக்கும் விஸ்தரித்தான். அப்பால் கிரேக்க அரசன் செல்யூகஸைத் தோற்கடித்து தன்னுடைய ராஜ்யத்தை ஹிந்துகுஷ் (ஆப்கானிஸ்தானம்) மலைத் தொடர்களுக்கு அப்பால் மேற்கே ஆமு கால்வாய் வரையும் விஸ்தரித்தான். சந்திரகுப்தனுடைய காலத்திலும் அவனுக்குப் பிந்திய மௌரிய அரசர்களுடைய காலத்திலும் இந்த சாகேதம் ஒரு முக்கிய வியாபார நகரமாகவே இருந்தது. அதைவிட உயர்ந்த ஸ்தானத்தை அது பெறவில்லை. மௌரிய வம்சத்தை அழித்த சேனாதிபதி
புஷ்யமித்திரன்தான் சாகேதத்தை முதன் முதலில் தலைநகரமாக ஆக்கினான். ஆயினும் பாடலிபுரத்தின் (பாட்னா) முக்கியத்துவத்தை அவன் குறைத்துவிடவில்லை. புஷ்யமித்திரன் அல்லது அவனை அடுத்து வந்த சுங்க வமிச அரசர்கள் காலத்தில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, சாகேத நகரத்திற்கு அயோத்யா என்ற பெயரைக் கொடுத்து விளம்பரப்படுத்தினான். இந்த ராமாயண காவியத்தை மகாகவி அஸ்வகோஷ் மிகவும் ரசித்துப் புகழ்ந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. மகாகவி காளிதாசன், அரசன் சந்திரகுப்த விக்கிரமாதித்தனுடைய ராஜாங்க வித்துவானாயிருந்ததுபோல் வால்மீகி முனிவரும் சுங்க வம்சத்து அரசர்களின் ஆஸ்தான வித்துவானாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. காளிதாசன், தான் இயற்றிய ‘ரகு வம்சத்தில்’ ரகுவாக அரசன் சந்திரகுப்த விக்கிரமாதித்தியனையும், ‘குமார சம்பவத்தில் குமரனாக குமார குப்தரையும் வருணித்திருப்பது போல், வால்மீகி முனிவரும் சுங்க வம்சத்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 181 | 182 | 183 | 184 | 185 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசன், இந்த, வால்மீகி, சந்திரகுப்த, சுங்க - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்