மருதகாசி பாடல்கள் - பக்கம் - 46
வாடா மல்லிகையே! வாடா என் இன்பமே! மாற்றுக் குறையாத தங்கமே! வளரும் என் செல்வமே! (வாடா) தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே! மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே! சிங்காரம் செய்யவே கொண்டேனே ஆசையே! தேனே என் செல்வமே! கண்ணே! (வாடா) நாடும் ஏடும் இங்கே உன் பேரையே! நாள் தோறும் கொண்டாட மந்திரியாகியே! வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே! வளரும் என் செல்வமே! கண்ணே! (வாடா) ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே! வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே! வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே வளரும் என் செல்வமே! கண்ணே! (வாடா) |
எங்கள் குலதேவி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 46 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வாடா, செல்வமே, கண்ணே, ஆசையே, கொண்டேனே, வளரும்