மருதகாசி பாடல்கள் - பக்கம் - 172

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை! அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை! (அன்) சொந்தமென்னும் உறவுமுறை நூலினாலேl-அருட் சோதியான இறைவன் செய்த பின்னல் வேலை! (அன்) தன்னை மறந்தாடும் சிலையே! சங்கத் தமிழ் பாடும் கலையே! சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே! உளமிரண்டும் நாடி உறவே கொண்டாடி கனிந்து முதிர்ந்த காதல்தனை நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே! (அன்) கொஞ்சு மொழிக் குழந்தைகளைப் பிரிந்த போது! நல்ல குலவிளக்காம் மனைவித்ன்னை இழந்தபோது! தம்பி தன்னைப் பறிகொடுக்க நேர்ந்த போது! சம்சாரம் எல்லாம் அழிந்த போது வாழ்வில் ஏது! (அன்) |
பாசவலை–1956
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: C. S. ஜெயராமன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 170 | 171 | 172 | 173 | 174 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 172 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - போது