தமிழ் - தமிழ் அகரமுதலி - புலர்பு முதல் - புலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புலர்பு | காண்க : புலர்காலை . |
| புலர்வு | காண்க : புலர்காலை . |
| புலரி | காண்க : புலர்காலை ; சூரியன் . |
| புலரிவைகறை | வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம் . |
| புலவர் | புலமையோர் ; பாவாணர் ; ஞானிகள் ; தேவர் ; குறுநிலமன்னர் ; கூத்தர் ; கம்மியர் ; ஓவியம் முதலிய கலைவல்லார் ; சாளுக்கியர் ; ஒருவகைச் சாதியார் ; சில இனத்தவரின் பட்டப்பெயர் . |
| புலவராற்றுவழக்கம் | புலநெறி வழக்கம் . |
| புலவரை | நிலவெல்லை ; அறிவின் எல்லை . |
| புலவல் | வெறுப்பு ; புலால் நாற்றம் . |
| புலவன் | அறிஞன் ; பாவாணன் ; தேவன் ; புதன் ; முருகன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் . |
| புலவி | ஊடல் ; வெறுப்பு . |
| புலவிநீட்டம் | ஊடல்மிகுதி ; கலவியிற் கூச்சம் . |
| புலவிநுணுக்கம் | சிறு காரணங்களைக் கற்பனையாகக்கொண்டு தலைவி ஊடுகை . |
| புலவு | காண்க : புல ; இரத்தம் ; வெறுப்பு ; அலறு ; நரகம் ; வயல் . |
| புலவுதல் | புலால் நாற்றமடித்தல் ; வெறுத்தல் . |
| புலவோன் | அறிஞன் ; பாவாணன் ; ஆன்மா . |
| புலன் | ஐம்புலன் நுகர்ச்சியாகிய சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்பவை ; பொறி ;கருமேந்திரியம் ; அறிவுடைமை ; அறிவுக்கூர்மை ; வெளிப்படக் காண்டல் ; உறுப்பு ; வயல் ; நூல்வனப்புள் ஒன்று . |
| புலன்வனப்பு | இயற்சொல்லால் உரிய பொருள் விளங்கக் கூறுதல் . |
| புலன்வென்றோர் | ஐம்புலன்களை வென்ற முனிவர் . |
| புலனறிதல் | துப்பறிதல் . |
| புலனி | நண்டு . |
| புலனிடம் | வாய் . |
| புலனுழுதுண்மார் | கற்றோர் . |
| புலனெறிதல் | ஐம்புலன்களை வெல்லுதல் . |
| புலனொடுக்கம் | ஐம்புல ஆசையை ஒடுக்குகை . |
| புலாகம் | சோற்றுப்பருக்கை . |
| புலாதி | கவலை ; குழப்பம் . |
| புலால் | ஊன் முதலியன ; புலால்நாற்றம் ; தசை நரம்பு . |
| புலால்கட்டி | முத்துக்குளியலின்போது மீன் முதலியவற்றை வாய்கட்டித் தடுப்போன் . |
| புலாவுதல் | புலால் நாற்றம் அடித்தல் ; வெறுத்தல் ; ஒலித்தல் ; விடிதல் . |
| புலாழி | புலால் நாற்றம் பொருந்திய சக்கரப் படை . |
| புலாற்றானம் | உடம்பு . |
| புலாற்றுருத்தி | உடம்பு . |
| புலான்மறுத்தல் | ஊன் உணவை விலக்குதல் . |
| புலானீர் | இரத்தம் |
| புலி | ஒரு விலங்குவகை ; ஒரு முனிவன் ; வேங்கை மரம் ; சிங்கம் ; சிம்மராசி' நால்வகைச் சாந்தினுள் ஒன்று ; மயிர்ச்சாந்து ; உண்ணாக்கு ; சூது கருவியுள் ஒன்று . |
| புலிக்கண்கல் | கோமேதகம் . |
| புலிக்குடத்தி | கழுதைப்புலி . |
| புலிக்கொடியோன் | சோழன் . |
| புலிகடிமால் | புலியைக் கொன்று முனிவரை மீட்ட இருங்கோவேள் என்னும் சிற்றரசன் . |
| புலிங்கம் | ஊர்க்குருவி ; தீப்பொறி . |
| புலிசங்கிலி | சங்கிலிவகை . |
| புலித்தண்டை | விருதுவகை ; கோயில் மரியாதை வகை . |
| புலித்தொடர் | புலிச்சங்கிலிவகை . |
| புலித்தோலுடையோன் | சிவபிரான் . |
| புலிதடுக்கி | காண்க : புலிதொடக்கி ; தொடரிச்செடி . |
| புலிதொடக்கி | கற்றாழை ; கொடிவகை . |
| புலிந்தன் | காண்க : புளிஞன் . |
| புலிநகக்கொன்றை | புலிநகம் போன்ற பூவையுடைய கொன்றைமரம் . |
| புலிப்பற்றாலி | புலிப்பல்லால் ஆன கழுத்தணி . |
| புலிப்பொறி | மதிற்பொறிவகை . |
| புலிப்போத்து | புலிக்குட்டி . |
| புலிமுகப்பு | புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை . |
| புலிமுகமாடம் | புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை . |
| புலிமுகவாயில் | புலிமுக உருவம் அமைந்த வாயில் . |
| புலியுயர்த்தோன் | புலிக்கொடியை உயர எடுத்தவனாகிய சோழன் . |
| புலியுறுமி | புலிபோல் முழங்கும் ஒரு பறைவகை ; கிறிச்சான் ; புள்ளோட்டும் கருவி . |
| புலியுறை | புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை . |
| புலியூர் | புலிக்கால் முனிவர் வழிபட்ட நகரமாகிய சிதம்பரம் . |
| புலு | பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி . |
| புலுட்டுதல் | ரொட்டி முதலியன கருக்குதல் ; சுடுதல் . |
| புலுட்டை | செழிப்பற்றது ; மங்கின நிறம் ; செழிப்பற்ற தன்மை . |
| புலுண்டல் | கருகல் உணவு ; செழிப்பற்ற தன்மை . |
| புலுண்டுதல் | கருகுதல் . |
| புலுதம் | உயிரளபெடை ; மெய்யெழுத்து ; குதிரை முழுவோட்டம் ; இசையின் காலவகை . |
| புலை | இழிவு ; அழுக்கு ; தீட்டு ; தீயநெறி ; பொய் ; ஊன் ; கீழ்மகன் ; தீநாற்றம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 785 | 786 | 787 | 788 | 789 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலர்பு முதல் - புலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புலால், நாற்றம், வெறுப்பு, ஒன்று, புலர்காலை, புலிதொடக்கி, முகப்பிற், புலியுருவத்தை, செழிப்பற்ற, தன்மை, சோழன், மாளிகை, செய்துவைத்துள்ள, ஐம்புலன்களை, இரத்தம், பாவாணன், அறிஞன், வயல், வெறுத்தல், முதலியன, முனிவர், உடம்பு

