முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பஞ்சகாவியம் முதல் - பஞ்சபாணம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பஞ்சகாவியம் முதல் - பஞ்சபாணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பஞ்சகாவியம் | சிந்தாமணி , சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , குண்டலகேசி என்னும் ஐந்து தமிழ்ப்பெருங்காப்பியங்கள் . |
| பஞ்சகிருத்தியம் | படைத்தல் , நிலைபெறுத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள் ; படைக்கலத்தால் பொரும்பொழுது வீரன் செய்தற்குரிய தொடை , விலக்கு , செலவு , சேமம் , தவிர்த்து வினைசெயல் என்னும் ஐந்தொழில்கள் ; உழுது பயிர் செய்தல் , பண்டங்களை நிறுத்து விற்றல் , நூல்நூற்றல் , எழுதுதல் , படைகொண்டு தொழில் பயிலுதல் ஆகிய ஐந்தொழில்கள் . |
| பஞ்சகோசம் | அன்னமயகோசம் , ஆனந்தமயகோசம் , பிராணமயகோசம் , மனோமயகோசம் , விஞ்ஞானமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் . |
| பஞ்சகோலம் | சுக்கு , திப்பிலி , திப்பிலிமூலம் , செவ்வியம் , சித்திரமூலம் இவற்றின் சேர்க்கை . |
| பஞ்சகௌவியம் | காண்க : பஞ்சகவ்வியம் . |
| பஞ்சங்கூறுதல் | ஏழைபோல நடித்தல் . |
| பஞ்சசத்தி | பரையாற்றல் , முந்தையாற்றல் , விருப்பாற்றல் , அறிவாற்றல் , வினையாற்றல் என்னும் ஐவகை சிவ ஆற்றல்கள் . |
| பஞ்சசயனம் | இலவம்பஞ்சு , பூ , கோரை , மயிர் , அன்னத்தூவி இவற்றால் செய்த படுக்கை ; அழகு , குளிர்ச்சி , மார்த்தவம் , பரிமளம் , வெண்மை என்னும் ஐவகைத் தன்மை கொண்ட படுக்கை . |
| பஞ்சசாயகன் | ஐங்கணைகளை உடைய மன்மதன் . |
| பஞ்சசீலம் | காமம் , கொலை , கள் , பொய் , களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய பௌத்தரொழுக்கம் . |
| பஞ்சசுத்தி | பூசைக்கு இன்றியமையாத ஐவகைச் சுத்திகளாகிய ஆத்துமசுத்தி , இலிங்கசுத்தி , திரவியசுத்தி , பூதசுத்தி , மந்திரசுத்தி என்பன . |
| பஞ்சஞானன் | புத்தர் . |
| பஞ்சடைதல் | பசி முதலியவற்றால் பார்வை மயங்குதல் . |
| பஞ்சணை | பஞ்சால் செய்தல மெத்தை . |
| பஞ்சத்துவம் | பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு . |
| பஞ்சதசம் | பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு . |
| பஞ்சதரு | சந்தானம் , தேவதாரம் , கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் என்னும் ஐவகைத் தெய்வமரங்கள் . |
| பஞ்சதன்மாத்திரை | ஐம்பெரும் பூதங்களின் நுண் நிலைகளாகிய ஐந்து தத்துவங்கள் . |
| பஞ்சதாரை | காண்க : பஞ்சகதி ; சருக்கரை . |
| பஞ்சதாளம் | சிவபிரானது ஐந்து முகத்தினின்றும் உதித்ததாகச் சொல்லப்படும் சச்சற்புடம் , சாசற்புடம் , சட்பிதா புத்திரகம் , சம்பத்து வேட்டம் , உற்கடிதம் என்னும் ஐந்துவகைத் தாளங்கள . |
| பஞ்சதிரவியம் | காண்க : பஞ்சகவ்வியம் ; மலைபடு பொருள் ; காடுபடுபொருள் , நாடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் என்னும் ஐவகைப் பொருள்கள் . |
| பஞ்சதிராவிடம் | விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம் , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் . |
| பஞ்சது | குயில் ; நேரம் . |
| பஞ்சதுட்டன் | கொலை , களவு , பொய் , கள்ளுண்ணல் , குருநிந்தை என்னும் ஐவகைக் கொடுஞ்செயல்களைச் செய்வோன் . |
| பஞ்சதுந்துபி | காண்க : பஞ்சமாசத்தக்கருவி . |
| பஞ்சதூபம் | அகில் , சாம்பிராணி , குந்துருக்கம் , குக்குலு , சூடன் என்னும் ஐவகையான புகைத்தற்குரிய மணப்பொருள்கள் . |
| பஞ்சதை | ஐம்பூதம் ; இறப்பு . |
| பஞ்சநகம் | ஆமை ; யானை ; புலி . |
| பஞ்சநகி | உடும்பு . |
| பஞ்சநதம் | ஐயாறு ; திருவையாறு என்னும் தலம் . |
| பஞ்சநதி | ஐயாறு ; திருவையாறு என்னும் தலம் . |
| பஞ்சப்பாட்டு | ஓயாது தனது ஏழைமையைக் கூறுங் கூற்று . |
| பஞ்சப்பிரமம் | ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் என்ற சிவனின் ஐம்முகங்கள் ; சிவபிரானின் ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| பஞ்சப்பொழுது | பஞ்சகாலம் , சிறுபொருளும் பெருவிலை விற்கும் காலம் . |
| பஞ்சபட்சி | குறியறிதற்கு உரியனவும் அ . இ . உ , எ , ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு , மயில் , ஆந்தை , காகம் , கோழி ஆகிய ஐந்து புட்கள் ; பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறி சொல்லும் நூல் . |
| பஞ்சபல்லவம் | பூசனைக்குரிய ஆத்தி , மா , முட்கிளுவை , முல்லை , வில்வம் என்னும் ஐந்தன் தளிர்கள் . |
| பஞ்சபாணம் | முல்லைமலர் , அசோகமலர் , தாமரைமலர் , மாம்பூ , குவளைமலர் என்னு மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 701 | 702 | 703 | 704 | 705 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பஞ்சகாவியம் முதல் - பஞ்சபாணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், ஐந்து, காண்க, ஐந்தொழில்கள், இறப்பு, பஞ்ச, பூதங்களும், செய்யும், சடங்கு, ஐயாறு, தலம், திருவையாறு, இறந்தவர்பொருட்டுச், பிரிதலாகிய, பதினைந்து, படுக்கை, பஞ்சகவ்வியம், ஐவகை, ஆகிய, ஐவகைத், கொலை, பன்னிரண்டாம், களவு, பொய், நாள்

