வாயு புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
சிவனுக்கும் பார்வதிக்கும் கணேசன், கார்த்திகேயன் என்று இரு குமாரர்கள் இருந்தனர். பருவம் அடைந்த இருவரும் திருமணம் செய்துவைக்கும்படி தாய் தந்தையரை வற்புறுத்தினர். இவர்களுள் யாருக்கு முதலில் திருமணம் செய்வது என்று பெற்றோருக்குப் பிரச்சனை. ஒருவருக்கு முதலில் செய்தால் மற்றவருக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதை அறிந்த பெற்றோர், இதற்கு ஒரு வழியைக் கண்டனர். இருவரையும் அழைத்து சிவன், “நீங்கள் இருவரும் உலகைச் சுற்றி வர வேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கு முதலில் திருமணம் செய்து வைக்கப்படும்” என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட கார்த்திகேயன் உடனே புறப்பட்டு விட்டார். கணேசன் சிறிது தூரம்கூடத் தன்னால் களைப்படையாமல் போக முடியாது என்பதை உணர்ந்தார். ஆதலால் சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார். உடனே குளித்துவிட்டு வந்து தாய், தந்தை இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் அமரச் செய்தார். அவர்களை ஏழுமுறை சுற்றி வந்து எதிரிலே நின்று வணங்கி, உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரைப் பார்த்துச் சிவன், "உலகைச் சுற்றிவருமாறு உங்களுக்குக் கட்டளையிட்டோம். நீ இன்னும் இங்கேயே இருக்கிறாய். கார்த்திகேயன் முன்னரே புறப்பட்டுச் சென்று விட்டான். உடனே புறப்பட்டுப்போ” என்றார். கணேசன் அவரைப் பார்த்து, "என் அருமைப் பெற்றோரே! தாய் தந்தையை ஒருமுறை பிரதட்சணம் செய்தால் உலகையே ஒருமுறை வலம் வந்ததாக அர்த்தம் என்று வேதங்களில் சொல்லியிருக்கிறது. நானோ என் பெற்றோரை ஏழுமுறை சுற்றி வந்து விட்டேன். அப்படியிருக்க, நான் உலகை வலம் வரவில்லை என்று சொன்னால் வேதத்தில் சொல்லியது பொய் என்று ஆகிவிடும். உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அவர் கூறியதற்கு மறுப்புக் கூற முடியாமையால் சிவன் அவர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். காசிய முனிவனின் மகன் விசுவருபனின் பெண்களாகிய சித்தி, புத்தி என்ற இருவரையும் கணேசருக்கு மணம் செய்வித்தனர். சித்திக்கு 'லக்ஷா என்ற மகனும், புத்திக்கு 'லபா என்ற பிள்ளையும் பிறந்தனர்.
உலகைச் சுற்றச் சென்ற கார்த்திகேயன் அப்பணியை முடித்துக் கொண்டு தாய் தந்தையரிடம் வந்து சேர்ந்தார். ஏற்கெனவே கணேசருக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகளும் பிறந்திருப்பதைப் பார்த்து பெற்றோருடன் தங்குவதில்லை என்று சொல்லிவிட்டு கிரெளஞ்ச மலைக்குச் சென்று தங்கிவிட்டார். இனித் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்துவிட்டார். சிவனும் பார்வதியும், தனியே இருக்கும்,மைந்தனைக் காண முறையே அமாவாசை அன்று ஒருவரும், பெளர்ணமி அன்று ஒருவருமாக கிரெளஞ்சலை சென்று பார்த்து வருகின்றனர். இதனால்தான் வட்நாட்டில்' உள்ள கார்த்திகேயன் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. - • .
லிங்க வடிவங்கள்
பக்தர்கள் எங்கே கூடினாலும் அங்கே சிவன் லிங்க வடிவில் தோன்றுகிறார். ஆயிரக்கணக்கான இடங்களில் சிவன் இருந்தாலும் 12 முக்கியமான லிங்கங்கள் ஜோதிர் லிங்கங்கள்” என்ற பெயரில் போற்றப்படுகின்றன. அவை, சோமநாதம், மல்லிகார்ஜுனம், மகாகாளன், ஓம்காரம், கேதாரம், பீமசங்கரன், விசுவநாதன், திரியம்பகம், வைத்தியநாதன், நாகேசுவரன், இராமேஸ்வரம், குஷ்மேஷா ஆகியவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 8 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கார்த்திகேயன், உடனே, திருமணம், சிவன், கணேசன், தாய், முதலில், வந்து, பார்த்து, ஏற்பாடு, சென்று, உலகைச், இருவரையும், சுற்றி, திருமணத்திற்கு