வாயு புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
நாரதரும், சம்பங்கி மரமும்
ஒருமுறை நாரதர் திருக்கோகர்ணம் சென்று சிவனை வணங்கப் புறப்பட்டார். வழியில் ஓர் அழகான சம்பங்கி மரம் பூத்துக் குலுங்கி நின்றது. அந்த அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அதன் அருகில் ஒரு பிராமணன் வந்தான். அவன் கையில் ஒரு பாத்திரம் இருந்தது. நாரதர் அவனைப் பார்த்து, “நீ யார்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அந்த பிராமணன் “நான் பிச்சை எடுக்கப் போகிறேன்” என்று பொய் கூறினான். அதை நம்பிய நாரதர், கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கிவிட்டு மீண்டார். கையில் உள்ள பாத்திரத்தில் சம்பங்கிப் பூவை நிறைத்துக் கொண்டு அதை மூடி வைத்திருந்தான். மறுபடியும் அவனைப் பார்த்து “எங்கே போகிறாய்?’ என்றார். ‘பிச்சை கிடைக்கவில்லை. வீட்டிற்குப் போகிறேன்” என்றான்.
அவனுடைய வார்த்தைகளில் சந்தேகப்பட்டு நாரதர் சம்பங்கி மரத்தினிடம், “ஏ மரமே! அந்த பிராமணன் உன் பூக்களைப் பறித்தானா?” என்று கேட்டார். பிராமணனைப் போலவே, அந்த மரம், “பிராமணனா, அப்படி ஒருவரும் இங்கு வரவில்லை. என் பூக்களை யாரும் பறிக்க வில்லை” என்று துணிந்து பொய் கூறிற்று. நாரதர் சந்தேகம் வலுக்கவே மறுபடியும் கோயிலுக்குச் சென்று பார்த்தார். சிவலிங்கத்தின் தலையில் புதிய சம்பங்கிப் பூ வைக்கப் பட்டிருந்தது. பக்கத்தில் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு அன்பரைப் பார்த்து, "இந்தப் பூவை யார் லிங்கத்தின் தலையில் வைத்தார்கள்?’ என்று நாரதர் கேட்டார். அந்த அன்பர், "மிகத் தீயவனும், பொய் பேசுபவனும் ஆகிய ஒரு பார்ப்பான் இருக்கிறான். சிவன் தயவை வைத்துக் கொண்டு இந்த ஊர் ராஜாவை கைக்குள் போட்டுக் கொண்டான். அந்த ராஜாவை ஏமாற்றிப் பணம் பறிப்பதுடன் மக்களையும் ஏமாற்றுகிறான்” என்று கூறினார். உடனே நாரதர் சிவலிங்கத்தைப் பார்த்து "இந்த அநியாயம் நடைபெற நீங்கள் உதவியாக இருக்கலாமா?” என்று கேட்டார். "என்னை வந்து பூஜிப்பவர்களை நான் கெடுக்க முடியாது” என்று சிவன் கூறிவிட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 6 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நாரதர், அந்த, ", பார்த்து, கொண்டு, கேட்டார், சம்பங்கிப், சென்று, பொய், பிராமணன், இலக்குவர்கள், மறுபடியும், சம்பங்கி, இராம