வராக புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
இறந்து போன மூதாதையர்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்று மார்க்கண்டேய முனிவரும் வராகமும் விவாதித்தனர்.
ஏழு தலைமுறைகளை மூதாதையர் என்று சொல்வர். இதில் ஒருவனுக்கு முற்பட்ட நான்கு தலைமுறைகளை பருப் பெருளாகவும், அதற்கு முற்பட்ட மூன்று தலைமுறைகளை நுண்பொருளாகவும் கொண்டு வழிபட வேண்டும். முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய கிரியைகள் செய்யும் பொழுது பொருட் செல்வம் என்பதும், பொருள்களைப் படைத்துத்தான் வழிபடவேண்டும் என்பதும் ஒரு பொருட்டே அல்ல. பொருளில்லாதவன் மூதாதையர்களை உளமார நினைத்து, தூய்மையான அன்புடன் கைகளைக் குவித்து வணங்கினால் அதுவே போதுமானது. மூதாதையர்கள், பொருள்களைப் படைத்து மனத்தில் அன்பில்லாமல் சடங்கு களாகச் சிரார்த்தம் முதலிய கிரியைகள் செய்து மகிழ்வதைவிட முதலில் சொன்ன முறையில் அன்போடு செய்யப்படும் வணக்கத்தில் அதிகம் மகிழ்கிறார்கள். இறந்தவர்களை எரிக்கும் சடங்கிற்கு எந்தவிதமான காலக்கட்டுப்பாடும் தேவையில்லை. உத்தராயணம், தட்சணாயணம், எந்த நட்சத்திரம் என்று கவலைப்படத் தேவையில்லை.
துர்ஜயாவின் கதை
சத்ய யுகத்தில் இக்கதை இடம் பெற்றது. அரசன் சுப்ரதிகாவிற்கும், வித்யுத்பிரபாவிற்கும் மகனாகப் பிறந்தவன் துர்ஜயா. இவர் துர்வாசரிடமிருந்து வரமும், சாபமும் பெற்றவன். அவர் கொடுத்த வரத்தின்படி இவன் யாராலும் வெல்ல முடியாதவன். அவர் கொடுத்த சாபத்தின்படி இவன் கல் போன்ற மனத்தினை உடையவன். ஒரு சமயம் சுவயம்பு மனுவின் மகன்களாக ஹத்தி, சுஹத்ரி இருவரும் பெரும் படையுடன் சென்று தேவர்களை அழிக்க ஆரம்பித்தனர். அச்சமயம் விஷ்ணு, எண்ணிலடங்கா உருவம் எடுத்து, இவர்களைச் சுமேரு மலையில் சண்டையிட்டு வென்றார். ஹத்ரி, சுஹத்தி என்ற இருவர் மட்டுமே மீதமிருந்தனர். அவர்களும் மந்தர மலைக்கு ஓடிவிட்டனர். அங்கு ஹத்ரியின் மகள் சுகேஸியும், சுஹத்ரியின் மகள் மிஸ்ரகேஸியும் இருந்தனர். மந்தர மலைக்கு வந்த துர்ஜயன், இவ்விரு அழகிய பெண் களைப் பார்த்து மயங்கி மணம் செய்து கொண்டான். அவனுக்கு இரு மக்கள் தோன்றினர்.
துர்வாச முனிவரின் வரத்தின்படி, துர்ஜயன் மூவுலகும் வென்று, இந்திரனை தேவருலகில் இருந்து விரட்டினான். ஒரு சமயம், வேட்டைக்குச் சென்ற துர்ஜயன், முனிவர் கெளரமுகாவின் ஆசிரமம் வந்தடைந்தான். அவனுடன் அவனது ஐந்து படைத்தலைவர்களும், அவர்களது சேனைகளும் உடன் வந்தனர். இவ்வளவு பேருக்கும் ஒரு முனிவரால் உடனே உணவு படைப்பதென்பது முடியக் கூடிய காரியமன்று. ஆனால் கெளர முனிவர் நாராயணனிடம் வேண்டி சிந்தாமணி என்ற ஒர் ஆபரணத்தைப் பெற்றிருந்தார். இந்த ஆபரணத்தைக் கையில் கொண்டு, ஒருவர் என்ன வேண்டும் என்று நினைத்தாலும், அது உடனே கிடைத்துவிடும். ஆகையால் கெளரமுகா முனிவர் துர்வஜாவிற்கும், அவனுடன் வந்திருந்த போராளிகள் அனைவருக்கும் வேண்டிய உணவு, தங்கும் இடம் மற்றும் அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்தார்.
இவ்வளவு சக்தி வாய்ந்த சிந்தாமணி மாலையைப் பார்த்து மிகவும் ஆசை கொண்ட துர்ஜயன், தன் மந்திரியாகிய விரோசனனை அனுப்பிக் கேட்டான். அவர் கொடுக்க மறுக்கவே, தன் சேனைகளை அனுப்பி மாலையினைக் கவர்ந்து வருமாறு கூறினார். கெளரமுக முனிவர், தன்னைக் காப்பாற்றும்படி சிந்தாமணி மாலையினை அடிக்க லட்சக் கணக்கான படைவீரர்கள் தோன்றி துர்ஜயனின் படையினை விரட்டி அடித்தனர். விரோசனன் கொல்லப்பட்டான். ஹத்ரி, சுஹத்ரி இருவரும் தத்தம் படைகளை உதவிக்கு அனுப்பினர். ஆனால் கெளரமுக முனிவர் விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவும் தன் சக்கரத்தால் துர்ஜயன், அவன் சேனை அனைவரையும் அழித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 12 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துர்ஜயன், முனிவர், சிந்தாமணி, அவர், தலைமுறைகளை, செய்து, வேண்டும்