வராக புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
இந்த நிலையில் சத்யதபா சிந்திக்கத் துவங்கினார். கடவுள் கொடுத்த ஐந்து உறுப்புகளும் ஒவ்வொரு பணிக்காகவே ஏற்பட்டுள்ளன. அடுத்ததொரு பணியை அது செய்யாது. கண் பார்க்கும். பார்த்ததைப் பற்றி வாயில்லாத காரணத்தால் அது சொல்லாது. மூக்கு மோக்கும். காது கேட்கும் என்றாலும் இவை ஒவ்வொன்றும் நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டுமானால் வாயின் உதவியை நாட வேண்டும். வாய், கண் பார்த்ததைச் சொல்லுமே தவிர, பார்க்கும் சக்தி வாய்க்கு இல்லை. எனவே கண் பார்த்ததை வாய் சொல்ல வேண்டும் என்று அவசிய மில்லை. முனிவரின் கண் பன்றியைப் பார்த்திருந்தாலும் அவர் வாய் பேசாது நின்று விட்டார். பொய் கூறாமலேயே முனிவர் பன்றியைக் காப்பாற்றிவிட்டார். இதனால் மகிழ்ந்த இந்திரனும், விஷ்ணுவும் முனிவரின் எதிரே காட்சி தந்தனர். இதனால் சத்யதபா என்ற முனிவரும் அவர் குரு அருணியும் விஷ்ணுவிடம் ஐக்கியமாயினர்.
அடுத்தபடியாக வராகம், பிருத்விக்குச் சொன்ன கதை
சுவேதா என்ற மன்னன் இலவிருதவர்ஷா என்ற நாட்டை ஆண்டு வரும்பொழுது பல யாகங்களும், தியானங்களும் செய்தான். அவன் குருவான வசிட்டர், அரசே! இந்த தானங் களோடு உண்பதற்குரிய அரிசியையும் தானம் செய்யுங்கள் என்றார். பொன், வெள்ளி இவற்றின் சிறப்பில் தன்னை மறந்திருந்த மன்னன் அரிசி தானத்தை மிக மட்டமாகக் கருதினான். ஆகவே அவன் அரிசி தானம் செய்யவில்லை. சொர்க்கம் சென்ற சுவேதா உண்பது முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் வேண்டுமான பொருள் சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டான். ஆனால் அரிசிச் சோறு தின்று பழகிய சுவேதாவிற்கு சொர்க்கத்தில் அரிசியே கிடைக்கவில்லை. உடனே அவன் பூமிக்குத் திரும்பி தான் இறந்த இடத்தை வந்து பார்த்தான். அங்கு பிண்டம் போட்ட அரிசி சிதறிக் கிடந்ததைக் கண்டு அதை உண்ண ஆரம்பித்தான். அப்போது அங்கு வந்த வசிட்டர், நான் சொல்லும்பொழுது நீ கேட்கவில்லை. அரிசி தானத்தை அலட்சியமாக நினைத்துவிட்டாய். இப்பொழுது தெரிகிறதா அதன் அருமை? இவ்வாறு அவனுக்கு அறிவுரை கூறிய வசிட்டர் மன்னன் சுவேதா விளங்கிக் கொள்வதற்காக மற்றொரு கதையும் எடுத்துக் கூறினார்.
விஷிதஷ்வா என்ற மன்னன் யாகம் செய்யும் பொழுது உணவுப் பண்டங்களையும் எள், அரிசி முதலானவற்றையும் தானம் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் கூறிய அறிவுரையைச் சட்டை செய்யாமல் இருந்தான். அதனால் அவன் சொர்க்கம் சென்று பசியினால் வாட நேர்ந்தது. எனவே தானம் செய்பவர்கள் உணவுப் பொருட்களையும் தானம் செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.
இதுவரை கூறிக் கொண்டு வந்த அனைத்தும் வராக புராணத்தில், வராக சம்ஹிதையின் ஒரு பகுதி ஆகும். இந்தப் பகுதி முதன் முதலில் பரப்பிரம்மத்தால், பிரம்மனுக்குச் சொல்லப்பட்டது. பிரம்மனில் இருந்து, புலத்தியனுக்கும், அடுத்து பரசுராமனுக்கும், அடுத்து உக்ரனுக்கும், அடுத்து மனுவுக்கும் சொல்லப்பட்டது. இதைச் சொல்லிக் கொண்டு வந்த வராகம், இந்த சம்ஹிதை போக புராணப் பகுதியை பிற்காலத்தில் வேதவியாச முனிவர் பாடல்களாகப் புனையப் போகிறார் என்றும், பிறகு அவரே லோமஹர்ஷனருக்கும், செளனகருக்கும் அதைச் சொல்லித் தருவார் என்றும், எதிர்காலத்தைப் பற்றி வராகம் கூறிற்று. இந்தப் பகுதியை கார்த்திகை துவாதசி அன்று படிப்பவர், அவர் விரும்பியவற்றை எல்லாம் பெறுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 10 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தானம், அரிசி, வேண்டும், மன்னன், அவர், அவன், பன்றி, அடுத்து, வசிட்டர், வந்த, சுவேதா, சத்யதபா, பாதி, வாய், வராகம்