வராக புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
விஹார என்னும் கிராமம், வடக்கு குஜராத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வராக சிற்பம் உள்ளது. இச் சிற்பம் மனித உடலைப் பெறாமல், ஒரு பன்றியின் உடலமைப்பையே பெற்றுள்ளது. வராக உருவம் பொருந்திய நாணயங்கள் பல இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
யக்ஞ வராகம் என்று ஒன்று உண்டு. பூமி, நாராயணன் பற்றிய மந்திரங்களைச் சொல்ல, பூமியைக் கடலினின்று காப்பாற்றிக் கொண்டுவர என்ன உருவம் எடுப்பது என்று விஷ்ணு யோசித்தார். முடிவில் யக்ஞ வராக உருவம் எடுக்க முடிவெடுத்தார். இந்த அவதாரம் பற்றி வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், மச்ச புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் குறிப்பிடு கின்றன. வராக புராணத்தில் இவை காணப்படவில்லை.
யக்ஞ வராகம் என்ற இந்தக் கருதுகோளில் யக்ஞம் என்ற சொல் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்யும் மாபெரும் மூல ஆற்றலைக் குறிப்பதாகும். வராகம் என்பது குழப்பம், ஒழுங்கின்மை என்பவற்றிலிருந்து பூமியை வெளிக் கொணர்வது என்பதன் குறியீடாகும். யக்ஞம், வராகம் என்ற இரண்டு சொற்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்ற பொருளுடையதாகவும், ஒன்றில் ஒன்று கரைந்து ஒன்றாகி விடும் பொருளுடையதாகவும் இருப்பதை அறியலாம். முப்பத்தைந்து பல்வேறுபட்ட சொற்களால் யக்ஞ வராகம் அழைக்கப்படுகிறது. இந்தச் சொற்கள் அனைத்தும் யக்ஞத்தின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்ற சொற்களாகவும், வராகத்தின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற சொற்களாகவும் இருப்பது சிந்திக்கத் தக்கதாகும்.
1) வேதபாதா: வராகத்தின் நான்கு பாதங்களும், நான்கு
2) யூபதம்ஷ்தரா: வராகத்தின் நீண்டிருக்கும் இரு கொம்புகளும் யாகத்தில் நடப்பட்டுள்ள யூபங்களாகும்.
3) கிரதுதந்தா: வராகத்தின் பற்கள் யாகத்தில் செய்யப்படும் 64 வகை பலிகளைக் குறிக்கும்.
4) சிட்டிமுகா: வராகத்தின் வாய் யாக குண்டமாகும்.
5) அக்னிஜிக்வா: வராகத்தின் நாக்கு குண்டத்தின் நெருப்பாகும்.
6) தர்ப்பலோமா: வராகத்தின் உடம்பில் உள்ள மயிர்கள் யாகசாலையில் உள்ள தர்பைப் புல்லாகும்.
7) பிரம்மசீர்ஷா: வராகத்தின் தலை பிரம்மனுக்கு ஒப்பாகும்.
8) அகோர திருக்ஷநாதரா: பகல் இரவு என்பவை வராகத்தின் இரு கண்களாகும்.
9) வேதாங்க சுருதிபூஷ்ணா: வேதத்தின் ஆறு அங்கங்கள், வராகத்தின் காதுகளில் உள்ள குண்டலங்களாகும்.
10) குஹ்ய உபநிஷதஆசன: வராகம் அமர்ந்திருக்கின்ற அமைப்பு, உபநிஷதங்களை ஆய்கின்றவர்கள் என்று கூறி அமர்ந்து சிந்திப்பது போல் உள்ளது. கூர்மையான அறிவு படைத்த ஒரு சிலர் மட்டுமே இதில் ஈடுபட முடியும்.
(இந்த வராக கற்பனை தோன்றுவதற்கு ஆகாயத்தில் உள்ள மிருக சீரிஷம் என்ற தட்சத்திரக் கூட்டம் இங்கிருந்து பார்ப்பதற்கு ஒரு வராகம் போல் இருப்பது காரணமாய் இருந்திருக்கலாம் என ரிக்வேதம் பேசுகிறது).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 2 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வராகத்தின், வராக, வராகம், உள்ள, புராணம், யக்ஞ, சிற்பம், உருவம், ஒன்று, நூற்றாண்டைச், போல், நான்கு, உள்ளது