மச்ச புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
நீருக்குள் ஆயிரம் ஆண்டு தவத்தை முடித்த வஜ்ராங்கன், ஆசிரமத்திற்கு வந்தபொழுது அதன் பரிதாப நிலையையும், மனைவி தவத்தில் இருப்பதையும் கண்டான். அது யாருடைய வேலை என்பதையும் தெரிந்து கொண்டான். இந்திரனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சியை பிரம்மாவும், தந்தையும் தடுத்து விட்டார்கள். எனவே தான் ஒரு மகனைப் பெற்று இந்திரனைப் பழிவாங்க முடிவு செய்தான். மறுபடியும் தவத்தில் ஈடுபட்டு பிரம்மன் எதிர்பட்டவுடன், இந்திரனை அழிக்க ஒரு மகன் வேண்டும் என வேண்டினான். அப்படியே ஆகட்டும் என்று பிரம்மன் கூறி மறைந்தார். இதிலிருந்து தாரகன் என்ற அந்தப் பிள்ளையை ஆயிரம் ஆண்டுகள் தன் கருவிலேயே வைத்திருந்தாள் வாரங்கி இறுதியாக தாரகன் என்ற மைந்தன் பிறந்தான். அவன் பிறந்த பொழுது பூமி நடுங்கிற்று. கடல் அலைகள் மிக உயரத்திற்கு எழும்பின. கொடுமையான புயல் வீசிற்று. கொடிய வன விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன. முனிவர்கள் பதறி நடுங்கினர். உரிய காலத்தில், தாரகன் அசுரர்களின் அரசனாகப் பதவி ஏற்றான்.
தாரகன் தவம்
தாரகன் பிறந்ததிலிருந்தே தேவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான். ஆனால் வரபலம் இல்லாமல் தேவர்களை எதிர்ப்பது இயலாத காரியம் என்பதை அறிந்த தாரகன், தவம் செய்ய புறப்பட்டான். பரிபத்திர மலைக்குச் சென்று அங்குள்ள குகையில் தவத்தை மேற் கொண்டான். சில நாட்கள் ஒன்றும் உண்ணாமலும் சில நாட்கள் தண்ணிரை மட்டும் குடித்தும், சில நாட்கள் பச்சை இலைகளை மட்டும் தின்றும் தவம் செய்தான். இறுதியாக அக்கினியை வளர்த்து தன் உடம்பில் உள்ள சதைகளை நெருப்பில் இட்டுத் தவம் செய்தான். அப்போது பிரம்மன் அவன் எதிரே தோன்றி, "இது போதும் உன்னுடைய உடலை அறுக்கத் தேவையில்லை. உன் தவத்தை மெச்சினேன். உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்” என்று சொல்ல, தாரகன் ஒரு வரத்தைக் கேட்டான். "என்னை யாரும் வெல்லக் கூடாது. சாவே என்னை நெருங்கக் கூடாது” என்ற வரத்தைக் கேட்டவுடன், பிரம்மன், "சாகாதவர்களே மூன்று உலகத்திலும் இல்லை. ஆகவே சிரஞ்சீவியாய் இருப்பது இயலாத காரியம். வேறு எப்படியானாலும் உன் வரத்தை மாற்றிக் கேள்” என்று பிரம்மா சொல்ல, தாரகன், "அப்படி எனக்குச் சாவு வருவதானால் ஒரு ஏழு வயது பாலகன் மூலம் வரட்டும்” என்று கேட்டான். பிரம்மன் அந்த வரத்தைத் தந்துவிட்டு மறைந்தார்.
தேவாகரப் போர்
தாரகன் பிரம்மனிடம் இருந்து வரத்தைப் பெற்ற பிறகு மிகப் பெரியதொரு படை திரட்டலானான். ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள் ஆகியவற்றைச் சேர்த்து, ஜம்பா, குஜம்பா, மகிஷா, குஞ்சரா, மேகா, காலநேமி, மதனா, ஜம்பகா, சும்பா ஆகியோர் படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
தேவர்களும் பெரும் போர் உள்ளது என்பதை அறிந்து பெரும்படை திரட்டினர். இந்திரன், மாதலி என்பவன் ஒட்டிய ரதத்திலும் எமன், எருமைக்கடா மேலும்; அக்கினி, ஆட்டின் மேலும் வருணன், ஒரு பாம்பின் மேலும் ஏறி வந்தனர். காலாட்படையில் சூரியன், சந்திரன், குபேரன் முதலியோர் வந்தனர். போர் தொடங்கியது. யானைகளோடு யானைகளும் குதிரைகளோடு குதிரைகளும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 13 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தாரகன், செய்தான், பிரம்மன், தவம், எல்லாம், ", நாட்கள், போர், மேலும், வரத்தைக், வேண்டும், இல்லை, தவத்தில், தவத்தை, என்பதை, பிறகு, வாரங்கி