மச்ச புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
புராணங்கள்
லோமஹர்ஷனர், முனிவர்களுக்குப் புராணங்களின் பட்டியலைக் கொடுத்துக் கூறியதாவது :
ஆரம்பத்தில் ஒரே ஒரு புராணம் மட்டுமே இருந்தது. வேத வியாசர் மூலபுராணத்தைப் பதினெட்டு மகாபுராணங்களாகப் பிரித்தார். அந்த மகாபுராணங்கள் மொத்தமும் நான்கு லட்சம் பாடல்களைக் கொண்டவை. அந்த மகா புராணங்கள் பின்வருமாறு :
1. பிரம்மபுராணம்: பிரம்மனால், மரீச்சி முனிவருக்குச் சொல்லப்பட்டது. இதில் பதின்மூன்றாயிரம் பாடல்கள் உள்ளன.
2. பத்மபுராணம்: ஐம்பத்தைந்தாயிரம் பாடல்களைக் கொண்டது.
3. விஷ்ணுபுராணம்: பராசர முனிவரால் சொல்லப்பட்டது. இருபத்து மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
4. வாயுபுராணம் (சிவபுராணம்): வாயுதேவனால் கூறப்பட்டது. இருபத்து நான்காயிரம் பாடல்களைக் கொண்டது.
5. பாகவதபுராணம்: பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.
6. நாரத புராணம்: நாரதரால் கூறப்பெற்றது. இருபத்து ஐந்தாயிரம் பாடல்களைக் கொண்டது.
7. மார்க்கண்டேய புராணம்: ஒன்பதாயிரம் பாடல் களைக் கொண்டது.
8. அக்னி புராணம்: அக்னி தேவனால் வசிட்ட முனிவருக்குக் கூறப்பட்டது. பதினாயிரம் பாடல்களைக் கொண்டது.
9. பவிஷ்ய புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பதினாலாயிரத்து ஐந்நூறு பாடல்களைக் கொண்டது.
10. பிரம்மவைவர்த்த புராணம்: சாவர்ணி மனுவால் நாரதருக்குக் கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.
11. லிங்க புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பதினோராயிரம் பாடல்களைக் கொண்டது.
12. வராக புராணம்: விஷ்ணுவினால், பூமிதேவிக்குக் கூறப்பட்டது. இருபத்து நான்காயிரம் பாடல்களைக் கொண்டது.
13. ஸ்கந்த புராணம்: ஸ்கந்தனால் கூறப்பட்டது. எண்பத்தோராயிரம் பாடல்களைக் கொண்டது.
14. வாமன புராணம்: பிரம்மனால் கூறப்பட்டது. பத்தாயிரம் பாடல்களைக் கொண்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 11 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கொண்டது, பாடல்களைக், புராணம், கூறப்பட்டது, இருபத்து, பிரம்மனால், சுக்கிராச்சாரி, அங்கு