மச்ச புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
சாவித்திரி
அஸ்வபதி என்ற மன்னன் குழந்தைப் பேறின்மையால் நீண்ட காலம் தவம் செய்து வந்தான். பிரம்மன் தோன்றி 'உனக்கு ஆண் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை. பெண் குழந்தை இருக்கும் என்று வரமளித்தார். வரத்தின்படிப் பிறந்த பெண்ணுக்கு மாலதி என்று பெயரிட்டு, சாவித்திரி தேவியை வேண்டிப் பெற்ற குழந்தை ஆதலின் அவளுக்கு சாவித்திரி என்ற பெயரும் வழங்கலாயிற்று. துயுமத் சேனாவின் மகன் சத்தியவானை மணந்த அவள் வாழ்க்கையில், நாரதர் வெளிப்பட்டு, “பெண்ணே! இன்னும் ஒராண்டில் உன் கணவன் உயிர் பிரியும். தக்க விரதங்களை மேற் கொள்வாயாக’ என்று கூறிப் போனார். அந்த வருடம் முடிய நான்கு நாட்கள் இருக்கையில், சாவை எதிர்பார்த்து பூஜை முதலியவற்றில் பொழுதைப் போக்குவதற்காகக் குளத்தங் கரையில் தங்கி இருந்தனர். சத்தியவானுக்குப் பொறுக்க முடியாத தலைவலி வர, மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்தான். அங்கே யமன் வந்து ஒர் அங்குல உயரமுள்ள சத்தியவான் உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
கற்புக்கரசியாகிய சாவித்திரியும் யமனைப் பின் தொடர்ந்தாள். பின்தொடர வேண்டா என்று யமன் தடுத்தும், சாவித்திரி அவனைப் பார்த்து இரண்டு காரணங்களால் உன்னைப் பின்தொடர்கிறேன். “முதலாவது காரணம், கற்புடைய பெண்ணாகிய நான் கணவன் எங்கே இருக்கிறானோ அங்கே செல்வதுதான் முறை. இரண்டாவது காரணம், தர்மதேவன் என்று உனக்குப் பெயர் இருப்பதால் உன்னைப் பின்தொடர்வது சிறப்புடையதாகும்” என்றாள். ஒவ்வொரு வரமாகத் தருகிறேன் என்று யமன் சொல்ல, கண் தெரியாத மாமனாருக்குக் கண் வேண்டும் என்றாள்; பெற்றாள். பிறகு ராஜ்ஜியத்தை ஆளத் தனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும் என்று வரம் கேட்டாள். கவனக் குறைவால் யமன் அப்படியே ஆகட்டும் என்றான். உடனே சாவித்திரி தர்மராஜனே! இது என்ன ஞாயம்? என் கணவனை நீ பிரித்து எடுத்துச் சென்றுவிட்டால், எனக்கு நூறு பிள்ளைகள் எப்படிப் பிறப்பார்கள்?’ என்று கேட்க, யமன் மனம் மிக மகிழ்ந்து சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.
பாற்கடல் கடைதல்
தேவர்கட்கும், அசுரர்கட்கும் இடைவிடாமல் போர் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கத்திலும் கணக்கற்றவர் இறந்து கொண்டே இருந்தனர். ஆனால் அசுரர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் குருவாகிய சுக்கிராச்சாரிக்குத் தெரிந்த மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால், இறந்த அசுரர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள, தேவர்கள் ஜனத்தொகை குறையலாயிற்று. தேவர்கள் சென்று தங்கள் நிலையை பிரம்மனிடம் விளக்கிச் சொல்ல, 'பாற்கடலைக் கடைந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 15 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, யமன், சாவித்திரி, பிரம்மன், சிவன், பார்வதி, வேண்டும், தவம்