மச்ச புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
பிரம்மனது அறிவுரை
தாரகனிடம் அடிவாங்கிய தேவர்களில் இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் நேரே பிரம்மனிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் எல்லாம் இழந்தவர்கள் போல முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டார். தேவர்கள் "பிரம்மாவே நீங்கள்தான் எங்கள் கஷ்டங்களுக்குக் காரணம். நீங்கள் தாரகனுக்குக் கொடுத்த வரத்தின் வன்மையால் எங்கள் அனைவரையும் கொடுரமாக அடித்து விட்டான். அவனைக் கொல்ல முடியாது என்று தெரிந்துவிட்டது. இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார்கள். பிரம்மன் கவலைப்பட வேண்டா. தாரகனைக் கொல்ல முடியும். ஓர் ஏழு வயது பாலகன் தான் அவனைக் கொல்ல முடியும். அப்படிப்பட்ட பாலகன் இன்னும் தோன்றவில்லை. சிவன்தான் அந்த பாலகனைத் தோற்றுவிக்க முடியும். அதற்குச் சில இடையூறுகள் உள்ளன. சிவன் தவத்தில் இருக்கிறார். சிவனை அடைய வேண்டும் என்று பார்வதியும் தவத்தில் இருக்கிறார். முதலாவது சிவனுடைய தவத்தைக் கலைக்க வேண்டும். இரண்டாவது பார்வதியைத் திருமணம் முடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி மதனனை விட்டு சிவனுடைய தவத்தைக் கலைக்க வேண்டும் என்று கூறினார்.
அனைத்தும் அப்படியே நடந்தது. சிவன் பார்வதியை மணந்தார். தடயுடலாகத் திருமணம் நடைபெற்றது.
சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த கார்த்திகேயன் குழந்தையாக இருக்கும்பொழுதே கோடி சூரியப் பிரகாசம் பெற்றிருந்தார். ஒரே உடம்பாயினும் ஆறு முகங்கள் பெற்றிருந்ததால், ஷடானனன் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. குழந்தையாக இருந்தாலும் அவன் யார் எனப் புரிந்து கொண்ட தேவர்கள் எல்லாவகையான ஆயுதங் களையும் அவர்களுக்குத் தந்திருந்தனர். இதன் பிறகு தாரகனுடன் அவர் போர் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
போர்க்களத்திற்கு வந்த கார்த்திகேயனைப் பார்த்து தாரகன் கேலி பேசத் தொடங்கினான். மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து பந்து விளையாட வேண்டிய நீ தவறுதலாகப் போர்க் களம் புகுந்து விட்டாய். ஒடிச் சென்று விளையாடுவாயாக என்றான் தாரகன். கார்த்திகேயன், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. உன் படைகளை அழைத்துக் கொண்டு போருக்கு வா என்று ஸ்கந்தன் கூறவே தாரகன் தண்டாயுதத்தை எறிய அவர் அதனைத் தடுத்துவிட்டார். அதன் பிறகு சக்திவாய்ந்த பல ஆயுதங்களையும் தாரகன் வீச அவற்றை எல்லாம் தடுத்து அழித்து விட்டார் ஸ்கந்தன். இறுதியாக ஸ்கந்தன் தன் வேலாயுதத்தைச் செலுத்தித் தாரகன் மார்பைப் பிளந்தான். தாரகன் பிரம்மனிடம் வரம் பெற்றபடியே ஏழு வயது பாலகனால் கொல்லப்பட்டான். தோல்வியே கண்டறியாத தாரகன் இறந்ததைக் கண்டு அசுரர்கள் போர்க்களத்தை விட்டே ஓடினர்.
கெளரி
சிவன் ஒருநாள் பார்வதியைப் பார்த்து விளையாட்டாக காளி என்று அழைத்தார். தன் கறுப்பு நிறத்தைச் சுட்டிக் காட்டிக் கேலி செய்கிறார் என்று நினைத்த பார்வதி பெருங் கோபம் அடைந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 14 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தாரகன், வேண்டும், தேவர்கள், ஸ்கந்தன், சிவன், கொல்ல, பார்த்து, என்ன, முடியும்