மச்ச புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
இதனிடையில் தேவர்கள் அசுரர்கள் மேல் போர் தொடுத்தனர். நிராயுதபாணிகளாய் முனிவரிடம் தங்கி இருக்கும் தங்களிடம் போரிடுவது தவறு என்று அசுரர்கள் சொல்லியும் தேவர்கள் அதனைச் சட்டை செய்யவில்லை. அஞ்சிய அசுரர்கள் சுக்கிராச்சாரியின் தாயிடம் வந்து புகல் வேண்டினர். அந்த அம்மையார், நீங்கள் அஞ்ச வேண்டா. நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி தம் ஆற்றலைப் பயன்படுத்தி, இந்திரனை ஒரே இடத்தில் அசைய முடியாமல் நிற்கச் செய்து விட்டார். இந்திரன் பரிதாபமாக நிற்பதைக் கண்ட தேவர்கள் ஒடி ஒளிந்தனர். இந்திரன் நிற்பதைப் பார்த்த விஷ்ணு அவனிடம் வந்து நீ என்னுள் புகுந்து கொள். நான் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்கிறேன் என்று கூற, இந்திரன், அசையவே முடியாத நான் உன்னிடம் எப்படி வருவது என்று கேட்க, அதோ சுக்கிராச்சாரியின் தாய் நிற்கிறாள். அவளைக் கொன்றுவிடுங்கள் என்று கூற, விஷ்ணு தன் சக்கரத்தால் அத்தாயின் கழுத்தை அறுத்து விட்டார். இது நடைபெறும் பொழுது பிருகு முனிவர் ஆசிரமத்தில் இல்லை. அவர் மீண்டும் ஆசிரமம் வந்தபொழுது நடந்ததை அறிந்து கொண்டார். தம் மாபெரும் ஆற்றலைப் பயன்படுத்தி, "விஷ்ணுவே! நீ பூலோகத்தில் பல பிறப்புக்கள் மானுடனாகப் பிறந்து உழல்வீராக” என்று சபித்தார். அதே ஆற்றலைப் பயன்படுத்தித் தம் மனைவியின் உயிரையும் மீட்டார்.
செய்வதறியாத தேவர்கள் பிரஹஸ்பதியிடம் சென்றனர். இந்திரன், பிரஹஸ்பதி சுக்கிராச்சாரி வடிவம் எடுத்து, அசுரர்கள் குரு என்ற முறையில் அவர்களை ஏமாற்ற வேண்டும் என்று தந்திரம் சொல்லிக் கொடுத்தான். பிரகஸ்பதியும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு சுக்கிராச்சாரி வடிவம் எடுத்து, பிருகு ஆசிரமம் வந்து, சுக்கிராச்சாரியிடம் பதவியை ஏற்றுக் கொண்டார். பிரஹஸ்பதியின் வஞ்சகம் தெரியாத அசுரர்கள் அவரைத் தம் குரு எனவே ஏற்றுக் கொண்டனர்.
பிரஹஸ்பதி அசுரரிடம் வந்த பொழுது, உண்மையான சுக்கிராச்சாரியின் தவம் ஆயிரமாவது ஆண்டை எட்டி விட்டது. சிவன் தோன்றி, மிருத்யுசஞ்சீவினி மந்திரம் சுக்கிராச்சாரிக்கும் பயன்படும் என்று கூறி மறைந்தார். தவம் கலைந்த சுக்கிராச்சாரி எதிரே உள்ள அழகான பெண்ணைப் பார்த்து, நீ யார்? ஏன் என்னிடம் பணிபுரிகிறாய்? என்று கேட்க, அப்பெண் உண்மையை மறைத்து, சுக்கிராச்சாரியின் மேல் உள்ள அன்பு காரணமாகப் பணிபுரிவதாகக் கூறினாள். அதில் மகிழ்ந்த சுக்கிராச்சாரி உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் தருகிறேன்' என்றார். இந்திரன், பிரகஸ்பதி ஆகியோர் செய்த துழச்சியை நன்கு அறிந்த ஜெயந்தி, ‘என்னை மணந்து கொண்டு பத்தாண்டுகள் என்னுடன் இருக்க வேண்டும்' என்றாள். சுக்கிராச்சாரி வரம் தந்தேன்’ என்று கூறி அவளை மணந்து பத்தாண்டுகள் அவளுடன் வாழ்ந்தார்.
ஜெயந்தி இந்த வரத்தைப் பெறுவதற்கும், பிருகஸ்பதி, சுக்கிராச்சாரியாராக மாறி அசுரர்கள் குருவாக மாறுவதற்கும் சரியாக இருந்தது. பத்தாண்டுகளுக்குப் பின், சுக்கிராச்சாரியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 10 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அசுரர்கள், சுக்கிராச்சாரி, இந்திரன், தவம், வேண்டும், வந்து, தேவர்கள், ஆற்றலைப், நான், சுக்கிராச்சாரியின், ஏற்றுக், கூறி, வரம், சுக்கிராச்சாரியார், செய்து, பிருகு, சிவன், கேட்க