பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
சிறுவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன், அண்டத்தின் அமைப்பில் தானும், தனது இந்திரப் பதமும் மலையளவு பெரியது என்று நினைத்திருந்த இந்திரன், கடுகைவிடச் சிறிய அற்பமான ஒருவன் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தான். உடனே விஸ்வகர்மாவை அழைத்து அவன் போகலாம் என உத்தரவு கொடுத்து விட்டான்.
அக்னியின் கர்வபங்கம்
ஒருமுறை அஷ்டதிக்குப் பாலர்களில் ஒருவனாகிய அக்னி ஏதோ காரணத்தால் சினம் கொண்டு மூன்று உலகத்தையும் எரித்துச் சாம்பலாக்குகிறேன் என்று சூளுரைத்து, பனை மரத்தை விட உயரமாகத் தன்னுடைய சுடர்களை நீட்டி அனைத்தையும் எரிக்கப் பார்த்தான். அப்பொழுது ஒரு குழந்தை வடிவாக அங்கே வந்த விஷ்ணு, ஒரு சிறிய துரும்பை எடுத்து அக்னிதேவனின் முன்னர் போட்டு, எங்கே இதை எரி பார்க்கலாம் என்றார். சினம் கொண்ட அக்னி அக் குழந்தையையும், துரும்பையும் ஒரே சமயத்தில் எரிக்க முயன்றான். குழந்தையின் தலையில் உள்ள ஒரு முடியைக் கூட அக்னியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிரே இருந்த துரும்பையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கர்வம் அடங்கிய அக்னி தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
(இதனை அடுத்து பிரம்ம வைவர்த்த புராணம் பார்வதி சந்திரன், சூரியன், துர்வாசர் முதலி பலருடைய கர்வ பங்கங்களை வரிசைப்படுத்திச் சொல்விக் கொண்டே போகிறது. அடுத்து இராமாயணத்தையும், கம்வைதத்தையும் பேசுகிறது).
ராதையும், கிருஷ்ணனும் சேர்ந்த கதை
பிரிதமாவின் சாபத்தால் கிருஷ்ணனைப் பிரிந்து ஒர் இடையர் குலப் பெண்ணாக வாழ்ந்து வந்த ராதை, சித்தாஸ்ரமம் சென்று வழக்கம் போல் கணேசனை வழிபடச் சென்றாள். அங்கு சென்ற பொழுது பார்வதி அங்கே தோன்றி. ராதை, நீ கிருஷ்ணனுடன் சேரும் காலம் நெருங்கிவிட்டது. விரைவில் அவனை அடைவாய்!” என்று கூறி மறைந்தார். இதனைக் கேட்ட ராதை தான் முன்பு பழகிய கோகுலத்திற்குச் சென்றாள். இப்பொழுது கிருஷ்ணன் கரிய நிறமுடையவனாக மஞ்சள் பட்டை அணிந்து, மயில் இறகைத் தலையில் அணிந்து, கையில் குழலுடன் ராதையை வந்து சந்தித்தான். கோபிகைகள் அனைவரும் ராதையையும், கிருஷ்ணனையும் வரவேற்றனர். அந்நேரம் கோலோக உலகினின்று பொன் விமானம் வர, நந்தகோபன், யசோதை, அனைத்து கோபிகைகள் ராதை, கிருஷ்ணன் ஆகிய அனைவரும் ஏறிக்கொள்ள அவ்விமானம் கோலோக உலகை அடைந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 17 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ராதை, அக்னி, காலம், இந்திரன்