பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
இதனைக் கேட்ட நாரதர், விஷ்ணு கணேசனுக்கு ஐராவதம் என்னும் யானையின் தலையைப் பொருத்தினார் அல்லவா? அப்படி இருக்க கணேசனுக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பது எப்படி என்று வினவ, நாராயண முனிவரும் கூறத் துவங்கினார்.
ஜமதக்கினி முனிவரின் மகனாகிய பரசுராமன் வெளியே சென்றிருக்கும் பொழுது, கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் கூடித்ரிய அரசனால் ஜமதக்கினி முனிவர் கொல்லப்பட்டார். இதனால் கடுங்கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை கூடித்ரியர்கள் இவ்வுலகில் இல்லாமல் செய்வேன் எனச் சபதமெடுத்து கூடித்ரியர்களைக் கொன்றான். சிவ பெருமானையே தன் குருவாகக் கொண்ட பரசுராமன் தன் சபதம் முடிந்தபின்பு, சிவபெருமானைக் காணச் சென்றான். வாயிலில் நின்றிருந்த கணேசன், சிவனும், பார்வதியும் ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதால், அவர்களை இப்பொழுது பார்க்க இயலாது என்றும் கூறினார். பொறுமை இல்லாத பரசுராமன் கணேசனைப் பார்த்து, "நான் இப்பொழுது உள்ளே செல்லப் போகிறேன். நீ குழந்தை. உன்னால் முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்” என்று கூறிக் கணேசனைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றான். கோபம் கொண்ட கணேசன் தன் தும்பிக்கையை நீட்டி பரசுராமனைத் துக்கிக் கடலில் எறிந்து, பின் மீண்டும் அவரை எடுத்து, பூமியில் தூக்கி எறிந்தார். பரசுராமன் சிவனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரசு என்னும் ஆயுதத்தை எடுத்து கணேசனை நோக்கி வீச அவ்வாயுதம் கணேசனின் ஒரு கொம்பினை உடைத்தது.
நடந்த கதைகளை அறிந்த சிவனும், பார்வதியும் கணேசனை அருகில் அழைத்து, பரசுராமனைப் பார்த்து பார்வதி தேவி பின்வருமாறு கூறினார்: “பரசுராமா! உன்னைப் போல் பல பரசுராமன்களை அழிக்க இவனால் முடியும். ஆனால் தன்னை மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கணேசன் ஒரு சிறு பூச்சிக்குக் கூட துன்பம் செய்யமாட்டான்' என்று கூறினார். பரசுராமனும் கணேசனை மலர்களால் தொழுது வணங்கினார். கணேசனுக்குத் துளசியைப் போட்டு வணங்குதல் கூடாது என்று கூறிய நாராயண முனிவர் அதற்கான காரணத்தையும் நாரதருக்கு விளக்கினார்.
ஒருநாள் கங்கைக் கரையினில் கணேசன் தவம் செய்து வந்தார். அங்கு வந்த துளசி, கணேசனைப் பார்த்து விருப்பம் கொண்டு தான் தர்மதுவஜா அரசனின் மகள் என்றும், தன்னைக் கணேசன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். கணேசனும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அற்றதாகவே இருக்கிறது என்பதால் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். கோபம் கொண்ட துளசி, 'கணேசன் பிரம்மசாரியாக இருக்க முடியாது என்று சாபமிட்டாள். கணேசனும், துளசியை ‘ஒரு அரக்கனிடம் சிக்கிப் பிறகு செடியாக இருப்பாய் என்று சாபமிட்டார். துளசி அவரிடம் மன்னிக்கும்படி கேட்க, கணேசனும் மனமிரங்கி, எல்லா மலர்களிலும் துளசி சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெறும் என்றும், விஷ்ணுவுக்கு மிக உகந்த மலராகும் என்றும் கூறி, தனக்குத் துளசியை யாரும் படைக்கக் கூடாது என்றும் கூறிவிட்டார்.
கிருஷ்ணன், ராதை
பிரம்ம வைவர்த்த புராணத்தின் இறுதிப் பகுதி கிருஷ்ண ஜென்ம காண்டம் என்ற பெயருடன் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம், லீலைகள் பற்றிக் கூறுகிறது. இதற்கெனவே இவை பற்றி விஷ்ணுபுர7ணத்திலும், பிரம்ம புராணத்திலும் கூறப் பட்டிருப்பதால், அங்கு கூறப்படாத பகுதிகள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 13 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கணேசன், என்றும், பரசுராமன், துளசி, கூறினார், கொண்ட, கணேசனும், செய்து, கணேசனை, என்னும், பார்த்து, சாபமிட்டார்