பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
அஷ்டவக்ர முனிவர்
கிருஷ்ணனும், ராதையும் மாளய மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் பொழுது அஷ்டவக்ர முனிவர் அங்கு வந்து அவர்களை வணங்கினார். கூன் விழுந்த உடலை உடையவர். அவரைப் பார்த்த ராதை பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளை சிரிக்கவேண்டாம் என்று கூறிவிட்டு, அவருடைய கதையைக் கூறினார்.
அஷ்டவக்ரமுனிவர் முற்பிறப்பில், தேவலா என்ற பெயருடைய பிராமணனாகப் பிறந்தான். தன்னுடைய மனைவி யுடன் நீண்ட காலம் கழித்துவிட்டு, இனிப் பெண்களுடன் தொடர்பே இல்லாமல் இருக்க நினைத்தான். ரம்பை என்னும் அப்சரஸ், தேவலாவை மணக்க விரும்பினாள். தான் எடுத்த முடிவிலிருந்து மாறுபட விரும்பாத தேவலா, ரம்பை கேட்ட வுடன் மறுத்துவிட்டான். இதைக் கேட்ட ரம்பை, உனக்குக் கோணல் புத்தி உள்ளது. அதைப் போலவே உன் உடலும் கோணலாகப் போகட்டும் என்று சபித்தாள். அத்துடன் நீ இதுவரை சேர்த்துள்ள புண்ணியம் அனைத்தும் பலனில்லாமல் போகட்டும் என்றும் கூறினாள். மிகக் கடுமையான இச் சாபத்தைத் தாங்கமாட்டாத தேவலா தன்னை எரித்துக் கொள்ள முயற்சி செய்கையில் கிருஷ்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அவனுடைய எட்டு எலும்புகளும் கோணலாகிப் போனதால், கிருஷ்ணன் அவனுக்கு அஷ்டவக்ரா என்று பெயரிட்டான். அவனை தியானம் செய்யும்படி கிருஷ்ணன் கூற, மாளய மலையில் அஷ்டவக்ரா முனிவர் அறுபதாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தார். கிருஷ்ணனின் அருளினால், அம்முனிவர் சாபம் தீர்ந்தது.
பிரம்மனின் வீழ்ச்சி
பிரம்மன் அகங்காரத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இருந்து எவ்வாறு வீழ்ச்சி அடைந்தான் என்பதை கிருஷ்ணன் ராதைக்கும் சொன்னார். படைத்தலாகிய தன் தொழிலில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதால் தன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற அகங்காரம் பிரம்மனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. இந்த நிலையில் தேவ கன்னிகையான மோகினி பிரம்மன்மாட்டுக் காதல் கொண்டு அவனை மணக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். ஆனால் பிரம்மன் அகங்காரம் காரணமாக மோகினியின் காதலை ஏற்க மறுத்து உதறிவிட்டார். தன்னுடைய உண்மையான காதல் உதாசீனப்படுத்தப்பட்டதைப் பொறுக்காத மோகினி, “உலகில் யாரும் உன்னை வணங்க மாட்டார்கள். கோவிலெடுக்க மாட்டார்கள். பிரம்மனை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் சடங்குகள் இல்லா திருத்தல் பயனற்றுப் போய்விடும்” என்ற சாபத்தை மோகினி பிரம்மனுக்குத் தந்தாள். அதிர்ந்து போன பிரம்மன், இச் சாபத்தினின்று எவ்வாறு தப்பிப்பது என்று யோசித்து, விஷ்ணுவிடம் சென்று முறையிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அப்படியே வைகுந்தம் சென்று விஷ்ணுவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். அப்படிக் காத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் கண்ட காட்சி அவனுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. திசைமுகன் என்ற பெயருக்கு ஏற்பத் தனக்கு நான்கு தலை இருப்பதில் பெருமையும், அகங்காரமும் கொண்டிருந்த பிரம்மன் அங்கே கண்ட காட்சி அவனுடைய மூச்சையே நிறுத்திவிடும் போல் இருந்தது. பத்துத் தலைகள் உடைய பிரம்மன், நூறு தலைகளுடைய
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 15 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், பிரம்மன், மோகினி, ரம்பை, தேவலா, முனிவர், வேண்டும்