பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
(இதை அடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள வசுதேவர் தேவகி கதை கிருஷ்ணன் பிறப்பு ஆதனை என்னும் அரக்கியின் கதை ஆகியவை முன்பே கொடுக்கப்பட்டுள்ளன),
நலகுபரன் கதை
ஒருநாள் யசோதை குளித்துவிட்டு வரும் பொழுது, தன் வீட்டில் வைத்திருந்த பால், தயிர் அனைத்தும் தீர்ந்து போயிருந்ததையும், வெண்ணெய் வைத்திருந்த மட்பாண்டம் உடைந்து போயிருந்ததையும் கண்டாள். ஒவ்வொரு நாளும் இதே நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. கோபம் கொண்ட யசோதை இதைச் செய்வது யார் எனக் கண்டுபிடித்து, தண்டனை தர விரும்பினாள். முடிவில் கிருஷ்ணனே இதைச் செய்திருப்பதை அறிந்து அவனைப் பிடிக்க முயன்றாள். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பிடியில் அகப்படாத கிருஷ்ணன், தன் தாய் யசோதையைக் கண்டு மனமிரங்கித் தானே வலிய வந்து அவளிடம் மாட்டிக்கொண்டான். யசோதை கிருஷ்ணனை நையப் புடைத்து, ஒரு துணியினால் அவனை மரத்துடன் சேர்த்துக் கட்டி விட்டு, தன் வேலை களைக் கவனிக்கச் சென்றாள். அந்த மிக உயரமான அருச்சுனா மரம், கிருஷ்ணன் தொட்டவுடன் பெரும் சப்தத்தை எழுப்பிக் கொண்டு கீழே விழுந்தது. அதிலிருந்து ஆபரணங்கள் அணிந்த அழகிய உருவம் வெளிவந்து கிருஷ்ணனை வணங்கி நின்றது. தேவல முனிவரை மதியாமல், அவமானப்படுத்தியதால் அவரிட்ட சாபத்தால் மரமாகி நின்றவன் நலகுபரன் என்பவன். இவன் குபேரனின் மகனாவான். முனிவர் கூறியபடி கிருஷ்ணனால் சாப விமோசனம் பெற்று, குபேரன் இருக்கும் இடம் சென்றான்.
(இதை அடுத்து கிருஷ்ணனின் விலைகளில் இடம்பெறும் காளிங்கன் என்னும் பாம்பின் கதை கோவர்த்தனமலை, தேனுகாசரன் கதை முதலியவை முன்பே கொடுக்கப் பட்டுள்ளன.)
துர்வாசர் கதை
நாராயண முனிவர், நாரதரிடம் துர்வாச முனிவர் கதையைக் கூற ஆரம்பித்தார்:
கந்தமாதனம் என்னும் மலையில் துர்வாசர் தியானம் செய்து கொண்டிருந்தார். வலிச்சக்கரவர்த்தியின் மகனாகிய சகசிகா, அப்சரஸ் திலோத்தமை ஆகியோரால் தவம் கலைந்த துர்வாசர் அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டு, தன் தவத்தையும் அத்துடன் விட்டுவிட்டு அங்குமிங்கும் உலவி வந்தார். அச்சமயம் ஒளர்வ முனிவரின் மகளாகிய கந்தலி என்பவளைக் கண்டு மணம் புரிந்து கொள்ள விரும்பினார். ஒளர்வ முனிவரும், துர்வாசரிடம் தன் மகள் மிகவும் சண்டை போடும் குணமுடையவள் என்றும், மனம் வருந்தும் படியான சொற்களைக் கூறுபவள் என்றும் கூறினார். துர்வாசரும், அவள் கூறும் நூறு கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்வதாகவும், அதற்கு மேல் கூறினால் அதற்குண்டான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 14 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துர்வாசர், என்றும், முனிவர், யசோதை, கிருஷ்ணன், என்னும், ராதை