பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
இந்திர கர்வபங்கம்
பிரகருதி ஆகிய பெண்ணை இந்திரன் கவனியாமல் விட்டு அவளுக்கு மனத்துயரை உண்டாக்கினான். சினம் கொண்ட பிரகருதி, உன்னுடைய குரு பிருகஸ்பதியாலேயே நீ உன்னுடைய பதவியை இழப்பாய்’ எனச் சாபம் தந்தாள். அதற்கேற்ப ஒருநாள் அமராவதியில் இந்திரன் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, தேவமாதர்களின் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு இருக்கின்ற நேரத்தில் தேவகுருவாகிய பிரகஸ்பதி இந்திரனுடைய சபைக்குள் வந்தார். பதவி கர்வமும், கேளிக்கை மோகமும் கொண்ட இந்திரன் சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்காமலும், குருவுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தைச் செய்யாமலும் இருந்துவிட்டான். அவனுடைய அகங்காரத்தை அடக்கக் கருதிய பிரகஸ்பதி, உன் பதவி முதலியவற்றை இழந்து அனைத்துச் செல்வங்களையும் இழந்து உழல்வாயாக என்ற சாபத்தைத் தந்தார். சாபமிடப்பட்டவுடன் இந்திரன் தலைநகராகிய அமராவதி தன் அழகை இழந்தது. அங்குள்ள கட்டடங்கள் இடிந்து விழலாயின. இந்தப் பரிதாபமான காட்சியைப் பார்த்த இந்திரன் தேவதச்சனாகிய விஸ்வகர்மாவை அழைத்து இழந்தவற்றைப் புதுப்பித்து மறுபடியும் அமராவதியைப் பழைய நிலைக்குக் கொண்டு வருமாறு ஆணையிட்டான். விஸ்வகர்மா எவ்வளவு முயன்று புதுப்பித்தாலும் இந்திரன் விஸ்வகர்மாவின் வேலையில் குறைசொல்லிக் கொண்டே வந்தான். எப்படிச் செய்தாலும் இந்திரன் திருப்தி அடைவதாக இல்லை. இந்திரனை விட்டு விட்டுப் போய்விட வேண்டும் என்று விஸ்வகர்மா பலமுறை முயன்றும் இந்திரன் அவனை விடுவதாயில்லை. இறுதியாக மனம் நொந்துபோன விஸ்வகர்மா பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மா விஸ்வகர்மாவை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஸ்வகர்மா நடந்தவை அனைத்தையும் சொல்லித் தனக்கு விடுதலை தருமாறு விஷ்ணுவிடம் வேண்டினான்.
இவற்றையெல்லாம் கேட்டறிந்த விஷ்ணு ஒரு பிராமணச் சிறுவன் வடிவம் கொண்டு, இந்திரனிடம், ஒ இந்திரனே! எத்தனையோ அமராவதிகளையும், இந்திரர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னுடைய இந்த அமராவதி போல அழகான ஒரு நகரத்தையும், உன்னைப் போன்ற ஒரு இந்திரனையும் பார்த்ததே இல்லை!" என்று சிறுவன் கூறினான். சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திரன், மிகவும் ஏளனமாக “பிராமணச் சிறுவனே! நீயோ சிறுவன். எத்தனையோ இந்திரர்களையும் அமராவதிகளையும் பார்த்திருக்கிறேன் என்றும் சொன்னாயே. அப்படி எத்தனை இந்திரர்களைப் பார்த்தாய்?" என்று கேட்டான். சிறுவன் சிரித்துக் கொண்டே இந்திரனே, இந்தச் சிறிய பூமிக்கு மேல் உள்ள தேவலோகத்தில் நீ இந்திரன். ஆனால் இந்தப் பெரிய அண்டத்தில் இதுபோன்ற எத்தனையோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 16 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இந்திரன், பிரம்மன், விஸ்வகர்மா, சிறுவன், பெரிய, விட்டு, கொண்டு, எத்தனையோ, இல்லை, உன்னுடைய, சிறிய, பிரம்மன்கள், தலைகள், விஷ்ணு, ", ஆகிய, இந்தப், உலகம்