பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
பிரம்மன், பிரபஞ்ச உற்பத்தியில் பித்ரி எனப்படும் முன்னோர்களை உருவாக்கினார். முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யும் பொழுது அது அவர்களைச் சென்று சேரவில்லை. அவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மனும் ஸ்வதா என்ற தேவதையை உருவாக்கி, சிரார்த்த மந்திரங்கள் கூறும்பொழுது ஸ்வதா என்ற சொல்லையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு கூறினால் மட்டுமே முன்னோர்களுக்கு செய்யப்படும் படைப்புக்கள் அவர்களைச் சென்றடையும் என்றும் கூறினார்.
தட்சிணா என்பவள் யக்ஞ தேவனின் மனைவி ஆவாள். யாகம் நடத்துபவர்கள் அதற்குண்டான தட்சினையை உடனடியாக செய்விப்பவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த யாகத்தினால் ஏற்படும் பலன்கள் பயனற்றுப் போய்விடும்.
பிரகருதி தேவதையின் ஆறில் ஒரு பங்கு உடம்பினைப் பெற்ற சஷ்டி, கார்த்திகேயனின் மனைவி ஆவாள். தேவசேனா என்ற பெயருடன் வழங்கப்படும் இவள் பிரம்மாவின் இச்சா மாத்திர சக்தியினின்று வந்தவள். குழந்தைகளுக்கு தெய்வமாக விளங்குபவள். சுயம்பு மனுவின் மகனாகிய பிரியவரதா, பெரிய யாகம் செய்து ஒரு மகனைப் பெற்றான். இறந்தே பிறந்த அக்குழந்தையை எரித்துவிட்டு, தானும் உயிர் விட நினைத்தான். சஷ்டி தேவதை அக்குழந்தைக்கு உயிர் கொடுத்தாள். ஒவ்வொரு மாதமும் ஆறாம் நாள், சஷ்டியைத் தொழ வேண்டும். குழந்தை பிறந்த ஆறு, இருபத்தியோரு நாட்களில், சஷ்டி தேவதைக்கு மலர், பழங்கள் முதலியன வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
நீலநிறக் கண்களை உடைய மங்கல சண்டி, துர்க்கையின் மற்றொரு வடிவினள். இத்தேவதை பெண்களுக்கு ஆரோக்கியமான உடலையும், செல்வத்தையும் தருபவள் என்பதால் மங்கல சண்டி எனும் பெயர் பெற்றாள். திருப்புராசுர அசுரனைக் கொல்வதற்குச் சிவன் கஷ்டப்பட்ட பொழுது, மங்கல சண்டி தன் சக்தியினைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தாள். முதன் முதலில் சிவனாலும், அடுத்து செவ்வாய்க் கோளினாலும், மூன்றாவது மனு வழியில் வந்த மங்கல அரசனாலும், நான்காவது பெண்களினால் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்கப்பட்டாள்.
காசிப முனிவரின் இச்சாமாத்திர உற்பத்தியாக உண்டாக்கப்பட்ட மானச தேவதை மிக அழகான நிறம் உடையவள் என்பதால் ஜகத்கெளரி என்று அழைக்கப்பட்டாள். இவள் சிவனைக் கைலாயத்தில் வணங்கி இறந்தவர்களை உயிருடன் எழுப்பும் கலையினைக் கற்றாள். கிருஷ்ணனைப் புஷ்கராவில் வணங்கி, என்றென்றும் எல்லோராலும் வணங்கப்படுவாய் என்ற ஆசியும் பெற்றாள். ஜரத்கரு உறங்கிக் கொண்டிருந்தான். வெகு நேரமாகியும் அவன் எழுந்திருக்க வில்லை. இதனால் மாலையில் அவன் பூஜை செய்வது தடைப்பட்டுவிடும் என்பதாலும், அவ்வாறு பூஜை செய்யாமல் இருப்பது பெரும் பாவத்தைச் சேர்க்கும் என்ற காரணத்தி னாலும் அவனை எழுப்பினாள். உறக்கம் கலைந்து எழுந்த ஜரத்கரு கடுங்கோபம் கொண்டு, அவள் நரகத்திற்குச் செல்வாள் எனக் கூறிவிட்டு, அவளைப் பிரிந்து சென்று தவம் செய்யலானான். சில காலங்களுக்குப் பிறகு சுஸ்திகா, ஜரதகருவிற்கும், மனசாவிற்கும் மகனாகத் தோன்றியவன் பெரியவனாக வளர்ந்த பின் சிவனை வேண்டி நீண்ட காலம் தவம் செய்தான். மனசாவும், காசிப முனிவரின் ஆசிரமம் சென்று தங்கி இருந்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 11 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சென்று, மங்கல, வேண்டும், கொண்டு, சண்டி, பூஜை, சஷ்டி, பொழுது, போலவும்