பிரம்ம புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
படைப்புக் காலத்தில் பிரம்மனுடைய எண்ணத்தில் தோன்றிய ஏழு பிள்ளைகளில் 'அத்ரி முனிவரும் ஒருவன் ஆவான். செய்தற்கரிய தவத்தை மேற்கொண்ட அவன் நீண்ட காலம் தவம் செய்தான். அத் தவத்தின் ஆற்றல் பெரும் சக்தியாக வெளிப்பட்டு விண்ணில் பரவியது. அவ்வாற்றலைத் தாங்கமாட்டாத ஆகாயம் அதனை மீண்டும் பூமியில் திருப்பியது. பூமிக்கு வந்த ஆற்றலில் ஒரு பகுதியே சந்திரனாகப் பரிணமித்தது. சந்திரனின் ஆற்றலைக் கண்ட பிரம்மன் தன்னுடைய ரதத்தில் அவனை ஏற்றிக் கொண்டு பூமியை 21 முறை வலம் வந்தான். அதன் பிறகு சோமனாகிய சந்திரன் நூறு பத்ம யுகங்கள் தவம் செய்தான். இத் தவத்தை மெச்சிய பிரம்மன் சோமனாகிய சந்திரனுக்கு உலகத்தில் உள்ள செடி, கொடி, மரங்களின் தலைமைப் பதவியும், பிராமணர்களின் தலைமைப் பதவியும், சமுத்திரங்களின் தலைமைப் பதவியும் கொடுத்தான். இவற்றையடுத்து சோமன் ராஜதுய வேள்வி நடத்தி எல்லையற்ற செல்வத்தைப் பெற்றான். இச் செல்வத்தின் வளர்ச்சி சோமனின் தலையை கணக்கச் செய்தது. அதிகார வெறி கொண்ட சோமன், தேவகுருவாகிய பிரஹஸ்பதியின் மனைவியாகிய தாரையைக் களவாடிக் கொண்டு வந்துவிட்டான். இத் தீச்செயலுக்கு உடந்தையாக அரக்கர்களும் அவர்கள் குருவாகிய சுக்ராச்சாரியும் இருந்தனர். தாரைக்காக தேவர்களுக்கும், சோமனுக்கும் நீண்டகாலம் போர் நடந்தது. இறுதியாக பிரம்மன் தலையிட்டு தாரையை மீட்டு பிரஹஸ்பதியிடம் ஒப்பித்தார். தாரையை ஏற்றுக் கொண்ட பிரஹஸ்பதி, அவளுக்கும் சோமனுக்கும் பிறந்த பிள்ளையாகிய புதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இந்த புதன்தான் இலாவை மணந்தவன் என்று முன்னரே குறிக்கப்பட்டுள்ளது.
மன்னன் யயாதியின் பரம்பரை
மன்னன் நகுவுனின் ஆறு பிள்ளைகளில் ஒருவனாகிய யயாதி, ஆட்சி மேற்கொண்டு உலகம் முழுவதையும் வென்றான். அவனுடைய ஐந்து மகன்களுக்கும் நாட்டை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நடுப்பகுதி என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சியை ஒப்பித்து விட்டு, உலகைச் சுற்றிப் பார்க்க நினைத்தான் யயாதி. உலகம் சுற்ற தன்னுடைய முதுமை இடையூறாக இருக்கும் என்று கருதிய யயாதி தன் மூத்த பிள்ளையாகிய 'யது'விடம் தன் முதுமையைப் பெற்றுக் கொண்டு அவன் இளமையைத் தருமாறு கேட்டான். அவனும், அவன் சகோதரர்கள் மூவரும் அவ்வாறு செய்ய மறுத்து விட்டனர். அவர்களையெல்லாம் சபித்து விட்டுக் கடைசிப் பிள்ளையாகிய புரு'விடம் கேட்டான். அவன் மகிழ்ச்சியுடன் தன் இளமையைத் தந்தான். இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி, நீண்ட காலம் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவன் இளமையைத் தந்தான். புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் என்று பெயர் வரக் காரணமான பரதனாவான். பரதனின் பரம்பரையில் வந்த 'குரு' என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்களே கெளரவர்கள் ஆவர். மன்னன் குரு ஆட்சி செய்த இடமே குருஷேத்திரம் எனப்படும்.
யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள், கேரளர்கள், சோழர்கள்.
யயாதி மன்னனின் மற்றொரு மகனாகிய துருயாவின் பரம்பரையில் வந்தவர்களே காந்தார மன்னனாகிய சகுனி முதலியவர்கள், யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவனே இராவணனை வென்ற கார்த்தவீரிய அருச்சுனன் ஆவான். யயாதியின் மற்றொரு பேரனாகிய குரோஷ்குவின் வழியில் வந்தவனே கிருஷ்ணன்.
ஆதித்தன் (சூரியன்) கோயில்: கீழ்க்கடற்கரையில் மணற்பாங்கான பிரதேசத்தில் சூரியனுக்கு ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் உள்ள பகுதி உத்கல நாடு எனப்படும். ஆதவனின் பிம்பம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 7 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, யயாதி, அவன், பரம்பரையில், வந்தவர்களே, மன்னனின், இளமையைத், யயாதியின், பிள்ளையாகிய, கொண்டு, பிரம்மன், தலைமைப், பதவியும், கொண்ட, மன்னன்