பிரம்ம புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
பிருத்வி என்ற பெயர்க் காரணம்
பிரம்மாவால் பங்கிட்டுத் தரப்பட்ட பூமிக்கு அரசனான பிருத்து நன்முறையில் ஆட்சி செய்ததால், பூமியில் வளங்கள் செழித்தன. பசுக்கள் பாலைப் பொழிந்தன. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள் பெரிய யாகத்தைச் செய்தனர். யாகத்தின் முடிவில் சுதாக்கள் என்றும், மகதாக்கள் என்றும் இரு கூட்டங்கள் தோன்றின. பிருத்துவின் புகழைப் பாடுமாறு முனிவர்கள் இவர்களை ஏவினர். ஆனால் “பிருத்து மிகவும் இளையவன். இப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறான். இன்னும் எந்த வேலையும் செய்து காட்டவில்லை. அப்படி இருக்க அவனது எந்த வீரச்செயலை எவ்வாறு புகழ்வது?” என்று சுதர்களும் மகதர்களும் முனிவர்களைக் கேட்டனர். முனிவர்கள் எதிர்காலத்தை அறியும் ஆற்றலை இவர்களுக்கு வழங்கினர். உடனே பிருத்துவின் புகழை அவர்கள் பாடினர். இந்தப் புகழ்ப் பாடல்கள் எட்டுத் திக்கும் சென்று பரவின. இப்படி இருக்கையில், பூமியின் வேறொரு மூலையில் இருந்து ஒருசிலர் பிருத்துவைக் காண வந்தனர். அவர்கள் பிருத்துவை நோக்கி, “அரசே! உன் புகழ் எட்டுதிக்கும் பரவி எதிரொலிக் கின்றது. எங்களது கஷ்டத்தை நீ போக்க வேண்டும். பூமியில் ஒன்றும் விளைவதில்லை. வளமின்மையால் பசுக்கள் பால் தரவில்லை. என்ன செய்வது?” என்று வினவினர். இதைக் கேட்ட பிருத்து மிகக் கோபம் கொண்டு தன்னுடைய வில்லை எடுத்துக்கொண்டு பூமியைப் பிளப்பதற்குப் புறப்பட்டான். அஞ்சிய பூமி, பசு வடிவெடுத்துக் கொண்டு ஒடத் துவங்கி மேலுலகம், கீழுலகம் சென்று எங்கும் புகல் கிடைக்காமையால் பிருத்துவின் எதிரே சென்று வேண்டி நின்றது. பூமியாகிய பசு பிருத்துவை நோக்கி, “அரசே! பெண்ணாகிய என்னைக் கொல்வதால் உனக்கு ஒரு பயனும் விளையாது. பெண் கொலை என்ற பாவம்தான் மிஞ்சும். அதற்கு பதிலாக இந்த பூமியை சமன்செய். மலைகளை எல்லாம் ஒருபுறமாக ஒதுங்கி இருக்குமாறு செய்வாயாக சமதரையில் வேளாண்மை செய்தால் தேவையான வளங்கள் உனக்குக் கிட்டும்” என்று கூறிற்று. இதைச் செவியுற்ற பிருத்து அவ்வாறே செய்தான். மலைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு சமதரை பெரிய அளவில் கிடைத்தமையின் வேளாண்மை வளம் பெறலாயிற்று. பூமியின் வளம் கொழிக்கலாயிற்று. உயிர்கள் வாழ்வுக்கு ஏற்றதாக இப்பூமியைச் சரிசெய்த மன்னவன் பெயராகிய பிருத்து என்பதே பூமிக்குப் பெயராக பிருத்வி என்று வழங்கலாயிற்று.
மன்வந்திரங்கள்
பருப் பொருளாகவும், முன் பொருளாகவும் இந்தப் பேரண்டத்தின் தோற்றம், நிலைபேறு, அழிவு என்பதைப் பற்றி பிரம்ம புராணம் தரும் கணக்கைச் சுருக்கமாகக் காணலாம். நான்கு யுகங்களை அடக்கிய கால எல்லைக்கு 'மன்வந்திரம்' என்ற பெயருண்டு. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் அதிபதியாக இருப்பவர் மனு. இந்தப் பிரபஞ்சம் தோன்றிய நாள்முதல் இதுவரை சுவயம்புமனு முதல் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர். இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்குத் தலைவன் 'வைவஸ்வத மனு என்பதாகும். இந்த மன்வந்திரத்தில் முறையே கிருத, திரேத, துவாபர யுகங்கள் முடிந்து இப்பொழுது கலியுகம் நடைபெறுகிறது. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம் என்று அழைக்கப்படும். இந்த மகாயுகத்தின் கால எல்லை 12,000 தேவ வருஷங்கள் ஆகும். இதை மனிதக் கணக்கில் கொள்வதானால் 43:20,000 வருடங்கள் ஆகும். இதுபோன்றே சுழற்சி முறையில் எழுபத்தோரு மகாயுகங்கள் முடிவுற்றால் வைவஸ்வத மனுவின் ஆட்சி முடிந்து அந்த மன்வந்திரமும் முடியும். ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் என்பவர்கள் மாறுவார்கள். வைவஸ்வத மனுவின் ஆட்சியில் நடைபெறும் இந்தக் கலியுகத்தில் அத்ரி, வசிஷ்டர், காசியபர், கெளதமர்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 5 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நான்கு, முனிவர்கள், பிருத்து, வைவஸ்வத, சென்று, பிருத்துவின், இந்தப்