பிரம்ம புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
வைவஸ்வத மனு பரம்பரை
சூரியனுக்கும், விஸ்வகர்மாவின் மகளுக்கும் பிறந்த முதல் குழந்தை வைவஸ்வத மனு எனப்படும். இந்த மனுவிற்கு நீண்ட காலம் குழந்தைப் பேறு இன்மையால் அவன் ஒரு பெரிய யாகத்தை நடத்தினான். அதன் பயனாக இக்சுவாகு முதலிய ஒன்பது பேர் மைந்தர்களாய்த் தோன்றினர். இக்சுவாகுவிற்கு நூறு மைந்தர்கள் தோன்றினர். ஒரு யாகம் நடத்துவதற்காகக் காட்டில் சென்று ஒரு மிருகத்தை வேட்டையாடி அதன் உடலைக் கொண்டு வருமாறு இக்சுவாகு முதல் மகனான விருக்சி'யை ஏவினான். காடு சென்று வேட்டையாடிய விருக்சி அதிகம் பசித்தமையால் அவ்வேட்டை மிருகத்தின் ஒரு பகுதியைத் தான் தின்றுவிட்டான். எச்சிலான பாகத்தைக் கொண்டு வந்தமையின் இக்சுவாகு அவனை நாடு கடத்திவிட்டான். இக்சுவாகு இறந்தபின் நாடு கடத்தப்பட்ட விருக்சி மீண்டு வந்து நாட்டை ஆட்சி செய்தான். இவன் ஆட்சி செய்த பகுதிக்கு அயோத்தி என்பது பெயர். விருக்சியின் மைந்தர்களுள் ஒருவனாகிய காகுஸ்தன் பரம்பரையில் தோன்றியவனே பிரசித்தி பெற்ற இராமன் ஆவான்.
திரிசங்குவின் கதை
துந்துபி என்ற அசுரனைக் கொன்ற குபலஷ்வாவின் மைந்தர்களில் ஒருவனாகிய திருதஷ்வாவின் பரம்பரையில் வந்த திரயருனி முறையான ஆட்சியை மேற்கொண்டான். ஆனால் அவன் மகனாகிய சத்யவிரதன் அவன் பெயருக்கு நேர்மாறாக நடந்து கொண்டான். அவன் கொடுமை அதிக மாகவே அவர்கள் குருவாகிய வசிட்டன், அரசனிடம் சொல்லி சத்தியவிரதனைப் பிரஷ்டம் செய்து நாட்டிற்கு வெளியே வாழுமாறு செய்தார். திரயருனி இறந்தவுடன் நாட்டை ஆள யாருமில்லை. பஞ்சம் பிடித்து உயிர்கள் இறக்கத் துவங்கின. இந்நிலையில் அந்நகருள் வாழ்ந்த விஸ்வாமித்திரன் தன் குடும்பத்தை விட்டுவிட்டுத் தவம் செய்யச் சென்று விட்டான். பசிக் கொடுமை தாங்காமல் விஸ்வாமித்திரர் மனைவி தன் மகனை விற்க முடிவு செய்தாள். எனவே அவன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டிச் சந்தைக்கு அழைத்துச் சென்றாள். பிரட்டனாக வெளியில் வாழ்ந்த சத்யவிரதன் அவனை விடுவித்து விஸ்வாமித்திரர் குடும்பத்தையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான். உண்பதற்கு ஏதும் இன்மையால் குல குருவாகிய வசிட்டன் பசுவைத் திருடி அதைக் கொன்று தானும் தின்று விஸ்வாமித்திரர் குடும்பத்திடமும் கொடுத்தான். இதை அறிந்த வசிட்டன் சத்தியவிரதனிடம் வந்து அவன் மேல் மூன்று குற்றங்களைச் சாட்டினார். முதலாவது குற்றம், தந்தை சொல் கேளாதது; இரண்டாவது குற்றம், பசுவைத் திருடியது: மூன்றாவது குற்றம், பசுக் கொலை புரிந்தது. இதனால் அவன் பெயர் முக்குற்றம் புரிந்தவன் என்ற பொருளில் 'திரிசங்கு என்றாயிற்று. தவத்தில் இருந்து மீண்ட விஸ்வாமித்திரர் நடந்தவற்றை அறிந்து திரிசங்குவை அரசனாக்கி ஆளச் செய்தார். இறுதியில் இந்த உடம்புடனேயே திரிசங்கு சொர்க்கம் செல்லத் தன் வரபலத்தால் ஏற்பாடு செய்தார் விஸ்வாமித்திரர்.
தசரதனின் முன்னோர்
துரிய வம்சத்தில் தோன்றிய திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன். அவன் பரம்பரையில் வந்தவன் திலீபன். அவன் மகனாகிய பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்ததால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயரும் வந்தது. இவர்கள் வழியில் தோன்றியவன் ரகு. இவனுடைய பேரனே பிரசித்தி பெற்ற இராமனின் தந்தையாகிய தசரதன் ஆவான். பிரம்ம புராணப்படி சூரிய வம்ச மன்னர்களின் வம்சாவளிச் சுருக்கம் இதுவாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 6 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவன், விஸ்வாமித்திரர், இக்சுவாகு, செய்தார், வசிட்டன், குற்றம், கொண்டு, சென்று, விருக்சி, பரம்பரையில்