பிரம்ம புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
துவாதச ஆதித்தர்கள் என்று சொல்லப்படும் பொழுது பன்னிரண்டு சூரியர்கள் என்று பொருள் கொள்வது தவறு. ஒரே ஆதித்தன் பன்னிரண்டு வகையான பணிகளைச் செய்கிறான். அவ்வப் பணியைச் செய்யும்பொழுது அதற்குரிய பெயரினைப் பெறுகிறான். உதாரணமாக, விஷ்ணு என்ற பெயரில் தேவர்களின் பகைவர்களை அழிக்கிறான். இந்திரன் என்ற பெயரில் அசுரர்களை அழிக்கிறான். தத்தா என்ற பெயரில் உயிர்களைப் படைக்கிறான். வருணன் என்ற பெயரில் நீரில் இருக்கிறான். சித்திரை முதல் பங்குனி முடியவுள்ள மாதங்களில் பருவங்களுக்கேற்ற முறையில் பல்வேறு மாறுபாடுகளைச் செய்தலின் பன்னிரண்டு சூரியர்கள் எனப்பட்டார்கள்.
உலகின் வாழ்விற்கு மூலமாக இருப்பவன் சூரியன் ஆதலால் பன்னிரண்டு சூரியர்கள் என்று சொல்லப் பட்டதோடல்லாமல் 12 சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டுள்ளன. அவை ஆதித்யா, சூர்யா, அருக்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, திவாகரன், ரவி முதலியவையாம். இவற்றை அல்லாமல் நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறியதாக பிரம்ம புராணம் கூறுகிறது.
பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றிய கதை
சத்தியயுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரதூய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும், இந்திரனும் அஞ்சும் பேராற்றலும் பெற்றவனாவான். வெறும் உடல் வன்மையோடு மட்டுமல்லாமல் வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். போர்க் கருவிகள் அனைத்தையும் கையாளும் பேராற்றல் பெற்றிருந்தான். சுருங்கச் சொன்னால் அவனுக்கு நிகரானவர் பூவுலகிலோ அன்றி தேவருலகிலோ இல்லை என்று கூறிவிடலாம். இவ்வளவு இருந்தும் கடுகளவும் அகங்காரம் கொள்ளாமல் விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கினான். தனக்குள்ள செல்வம், ஆற்றல், அதிகாரம், செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்த ஒரு வழியைக் கண்டான். தன்னால் வழிபடப்படும் விஷ்ணுவிற்கு அன்றுவரை யாரும் கட்டாத ஒரு சிறந்த கோயிலை அமைக்கத் தீர்மானித்தான். சிறந்த கோயிலாக அமைவதுடன், அக்கோயில் அமைகின்ற இடமும் ஈடு இணையற்றதாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்ததில் வியப்பொன்றுமில்லை. எங்கும் பரவி இருந்த அவன் செல்வாக்கு காரணமாக எல்லாத் தீர்த்தங்களையும், இருமருங்கிலும் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களையும் பார்த்து அலசி ஆராய்ந்தான். அவனுடைய தலைநகரான அவந்தியும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் மிக அற்புதமாக இருந்தன. பெரிய பெரிய விண்ணை இடிக்கும் கட்டடங்கள் நிறைந்திருந்தது அவந்தி. ஓயாத மக்கள் நடமாட்டமும், பெரு வாணிபம் நடைபெறுகின்ற கடைவீதிகளும் நிறைந்திருந்த அவந்தியில், விஷ்ணு கோயிலைக் கட்ட ஏனோ அவன் மனம் இடம் தரவில்லை. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், சிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மிகப் பிரசித்தமான மகாகாளர் திருக்கோயில் என்று வழங்கப்படும் ஒரு பெரிய சிவன் கோயிலும், கோவிந்த சாமி, விக்கிரம சாமி என்ற பெயர்களில் இரண் விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன. மகா காளர் கோயிலைப் பொறுத்தமட்டில்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 8 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பெயரும், விஷ்ணு, பெயரில், பன்னிரண்டு, பெரிய, அவன், அவந்தி, சூரியர்கள், அனைத்தையும்