பிரம்ம புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
எனவே தன் அமைச்சர்கள், படைகள் ஆகியோருடன் சிறந்ததோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டு விட்டான் இந்திர தூய்மன். நீண்ட தேடலுக்குப் பிறகு கடற்கரையை அடைந்தான். இக்கடற்கரைப் பகுதியில் சில காலம் வசித்த பிறகு மிக்க அழகு வாய்ந்ததும், இயற்கை எழில் கொஞ்சுவதும், பறவைகள் மகிழ்ந்து திரிவதுமான புருஷோத்தம க்ஷேத்திரம் என்ற இடத்தை அடைந்த அரசன், தான் நினைத்த ஆலயத்தைக் கட்ட இதுவே சிறந்த இடம் என்ற முடிவுக்கு வநதான்.
மிக அழகிய இந்தப் பகுதிக்கு புருஷோத்தம க்ஷேத்திரம் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணமுண்டு. பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது. யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று. வேலை இல்லாத திண்டாட்டத்தில் அவதிப்பட்ட எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான். அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார். இப்பொழுது முன்போல மக்கள் வந்து உடனடியாகத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிய வில்லை என்றாலும், ஊருக்கிருந்த மதிப்பு குறையாமல் இருந்தது. புருஷோத்தமன் என்பது மகாவிஷ்ணுவிற்கு ஒரு பெயராகும். எனவே அவரால் பிரசித்தி பெற்ற இந்த இடத்திற்குப் புருஷோத்தம நகரம் என்று பெயர் வந்தது இயல்பே. இந்த இடத்தைப் பார்த்தவுடன் இந்திர தூய்மன் மனத்தில் ஒரு நிறைவு ஏற்பட்டது. வேறு இடம் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது. மிகச் சிறந்த இந்த இடத்தில் ஈடு இணையில்லாத ஒரு விஷ்ணு ஆலயத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டான்.
பேரரசனாகிய அவன் தான் மட்டும் இதனைச் செய்யாமல் பிற அரசர்கள், செல்வர்கள், வணிகர்கள் ஆகியவர்களும் இதில் பங்குபெற வேண்டி அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தான். கோயில் எப்படிக் கட்ட வேண்டும் என்ற திட்டம் உருவாயிற்று. அதற்கு வேண்டிய பொன், பொருள் முதலியவை கணக்கின்றிக் கிடைத்தன. கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது. பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த யாகத்தில் கிடைக்கும் தானத்தைப் பெறுவதற் காகவே பிராமணர்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கூடினார்கள். அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் கோயில் கட்டும் பணி துவங்கி அதுவும் முடிந்துவிட்டது. எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.
மறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர். இதுவே இன்று பிரசித்தியுடன் விளங்கும் பூரி ஜெகந்நாதர் ஆலயம்.
மார்க்கண்டேயர்
யுக முடிவில் அண்டம் முழுவதையும் நெருப்பு சூழத் துவங்கி அனைத்தையும் எரித்துவிட்ட நிலையில், மார்க்கண்டேய முனிவர் மட்டும் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்யும் நிலையில்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 9 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வந்து, கோயில், விஷ்ணு, புருஷோத்தம, யாகம், அஸ்வமேத