பிரம்ம புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
ஒரு சிறிய நாட்டில் ஆட்சி செய்த அரசனுடைய ஒரே மகள் கண்களை இழந்து சோகத்தில் மூழ்கி இருந்தாள். தம் மகளின் கண்களை யார் சரி செய்கிறார்களோ அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டையும் ஆளலாம் என்று கூறியிருந்தார் அந்த அரசர். இதை அறிந்த மணிகுண்டலன் தனக்குத் தெரிந்த மருந்துச் செடியின் உதவியால் அரசகுமாரியின் இழந்த கண்களைப் பெறுமாறு செய்து, அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டை ஆண்டான். சில காலம் கழித்து காவலர்கள் ஒருவனைக் கொண்டுவந்து அவன்முன் நிறுத்தினர். அவன் வேறு யாருமல்ல, தீய வழியில் சென்று மணிகுண்டலன் பொருட் களையும் அபகரித்துக் கொண்டு அவனையும் கொல்ல நினைத்த கெளதமன் என்ற பிராமணனே ஆவான். மணி குண்டலன் அவனை அடையாளம் தெரிந்து கொண்டு அவனை மன்னித்து வேண்டுமான திரவியங்களும் தந்தான். தருமம் இறுதியில் வென்றது.
ஏகாதசி மகிமை
அவந்தி நகரத்தின் எல்லைக்கப்பால் பிரஷ்டம் செய்யப் பட்ட சண்டாளன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவந்தி நகரைச் சுற்றி ஒடும் சிர்பா நதியின் கரையில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. இந்தச் சண்டாளன் மிகப் பெரிய விஷ்ணு பக்தன். ஏகாதசி அன்றைக்கு முழுப்பட்டினி இருந்து அன்று இரவு விஷ்ணு கோயிலுக்குச் சென்று மனமுருகிப் பாடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தான். ஒருமுறை ஏகாதசி வழிபாட்டிற்குப் புறப்பட்ட அவன், நதிக்கரையில் இருந்த மரங்களில் பூப்பறிக்கத் துவங்கியபோது ஒரு சிக்கலில் அகப்பட்டுக் கொண்டான். அந்த மரத்தில் இருந்த பிரம்ம ராட்சதன், “நில், பசியால் துடிக் கின்றேன். உன்னைத் தின்னப் போகிறேன்” என்றான். அது கேட்ட சண்டாளன் சிறிதும் அச்சம் இல்லாமல் “நல்லது, உனக்கு உணவாவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இப்பொழுதில்லை. 20 ஆண்டுக்காலமாக ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகிறேன். இன்று ஏகாதசி. என்னை இப்பொழுது விட்டுவிட்டால் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு வந்து, நாளைக் காலை உனக்கு உணவாகிறேன்” என்று உறுதியோடு கூறினான் சண்டாளன். அதைக்கேட்ட பிரம்ம ராட்சதன் (பார்ப்பனப் பேய்) அவனுடைய உறுதிப்பாட்டைக் கண்டு அவன் போய்வர அனுமதி தந்தது.
சண்டாளன் தன் வார்த்தை தவறாமல் மறுநாள் காலை வந்து பிரம்ம ராட்சதனிடம் “இன்று, இப்பொழுது என்னை உண்ணலாம்” என்றான். ஆச்சரியம் அடைந்த பிரம்ம ராட்சதன், "எவ்வளவு நாளாக இந்த ஏகாதசி விரதம் இருக்கிறாய்?" என்று கேட்க, "20 ஆண்டுகள்” என விடை பகர்ந்தான் சண்டாளன். அதைக்கேட்ட பிரம்ம ராட்சதன், "நான் ஆதியில் பிராமணனாகத்தான் இருந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 17 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஏகாதசி, அவன், சண்டாளன், கொண்டு, பிரம்ம, அந்த, ", ராட்சதன், விஷ்ணு, வந்து, சென்று, செய்து, இறுதியில், கோயிலுக்குச், இருந்து, மணிகுண்டலன்