அக்னி புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
சுக்கிலபட்சம் நான்காம் நாள் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படும். கண தேவதைகளை வழிபடுவதற்கும் சிறந்த நாள். வாசனையுள்ள மலர்களை வைத்து வழிபட வேண்டும்.
சுக்கிலபட்சம் ஐந்தாம் நாள் இருப்பது பஞ்சமி விரதம். இவ்விரதத்தினால் நோயற்ற வாழ்வும், கெட்ட சகுனங்களைப் பார்த்ததில் இருந்து விடுதலையும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமி திதி சிறப்பானதாகும்.
சுக்கிலபட்சம் ஆறாவது நாள் அனுஷ்டிக்க வேண்டியது. சஷ்டி விரதம். இந்த விரதம் இருப்பவர்கள் வெறும் பழங்களை மட்டுமே உண்ணவேண்டும். இந்த விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் பலன்கள் என்றென்றும் நிற்பவை ஆகும். இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்புடையதாகும்.
சுக்கிலபட்சம் ஏழாவது நாள் சூரியனுக்கு உகந்தது. இன்று எடுக்கப்படும் சப்தமி விரதம் மனத்தின் கவலைகள் அனைத்தையும் போக்க வல்லது. பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நினைப்பவை நடந்தேறும் குழந்தை பாக்கியமற்ற வர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
எட்டாவது நாள், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, மிக முக்கியமானது. கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஆதலால் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி மிக முக்கியமானதும், சிறப்பு வாய்ந்ததும் ஆகும். அந்நாளில் விரதம் இருந்து கிருஷ்ணனை வேண்டினால், ஏழு ஜென்மத்தில் செய்த பாவம் விலகி விடும். கிருஷ்ணனின் ஜெயந்தி அன்று ரோகிணி, சந்திரன், தேவகி, வசுதேவர், யசோதை நந்தன், பலராமன் ஆகிய அனைவரையும் வணங்க வேண்டும். கிருஷ்ணன் குறிப்பிட்ட இந்த அஷ்டமி திதியில் பிறந்ததால், அந்த நாளுக்கு ஜன்மாஷ்டமி என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் இரண்டிற்கும் எட்டாவது நாள் அஷ்டமி திதி இருந்து அது எந்த மாதமாக இருப்பினும் அது சிறப்பு வாய்ந்த நாள் எனப்படும். உதாரணத்திற்கு அந்த நாள் புதன்கிழமை என்று எடுத்துக் கொண்டால், புதாஷ்டமி என்று பெயர். இவ்வாறு வரும் அஷ்டமியில் ஒருவர் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு காலத்தில் திரா என்ற பிராமணன், ரம்பா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு கெளசிகா என்ற மகனும், விஜயா என்ற மகளும் இருந்தனர். திராவிடம் தனடா என்று ஒர் எருமை இருந்தது. அந்த எருமையைப் புல்வெளிக்குக் கூட்டிச் சென்று உண்ண வைப்பது கெளசிகாவின் வேலை. ஒரு சமயம் கெளசிகா பாகீரதி நதியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எருமை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது சில திருடர்கள் வந்து, அந்த எருமையைத் திருடிச் சென்றனர். கெளசிகாவும், அவன் சகோதரியும் எருதினைத் தேடிக் கொண்டு, ஒர் ஆற்றின் அருகில் வந்தனர். அந்த ஆற்றில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கெளசிகாவும் அவன் சகோதரியும் தங்களுக்கு மிகவும் பசியாக இருக்கிற தென்றும், உண்ணுவதற்குச் சிறிது உணவு கொடுக்கும்படியும் கேட்டனர். அப்பெண்களும், அவர்கள் இருவரும் தங்களைப் போல் புதாஷ்டமி விரதம் இருந்தால் கொடுப்பதாகக் கூறினர். கெளசிகா, அவ்விரதத்திற்குரிய சடங்குகளைச் செய்தவுடன், அவனுடைய எருமை தெய்வாதீனமாகத் திரும்ப வந்து சேர்ந்தது. பிறகு கெளசிகா தன் சகோதரி விஜயாவை யமனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தான் அயோத்தியின் அரசனாக ஆட்சி செய்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 14 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விரதம், நாள், வேண்டும், சுக்கிலபட்சம், அஷ்டமி, அந்த, திதி, கெளசிகா, எருமை, மாதத்தில், திதியில், இருந்து, வரும்