அக்னி புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
ஒரு யாகம் செய்து ஏற்படும் புண்ணியத்திற்கு ஈடாக ஒர் இடத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்வது அமையும்.
புஷ்கரா என்னும் இடம் மிகச் சிறந்த தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இந்த இடத்திற்குச் செல்ல கார்த்திகை மாதம் சிறந்ததாகும். புஷ்கராவில் இன்னும் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. அவை ஜம்புமார்க்கம், தண்டுலகாசிரமம் ஆகியவை. குருக்ஷேத்திரம் சிறந்த தீர்த்த யாத்திரை இடமாகும். சரஸ்வதி நதி, குருக்ஷேத்திரத்திற்கு அருகில் ஒடுகிறது. இந்நதியில் நீராடினால் ஒருவர் பிரம்மலோகம் அடைய முடியும்.
கங்கை நதி பாய்ந்து செல்லும் இடங்கள் அனைத்தும் புண்ணிய தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றன. கங்கை நதியில் மண்ணை எடுத்துத் தலைமீது வைத்துக் கொள்பவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிரயாகை என்பது மற்றொரு சிறப்பான இடம். பிரம்மன், விஷ்ணு. இந்திரன், மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள். அப்ஸரஸ்கள் எப்பொழுதும் இங்கு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இரண்டு புண்ணிய நதிகளாகிய கங்கையும் யமுனையும் இணைந்து பிரயாகையில் ஒடுகின்றன. முனிவர்களின் கூற்றுப்படி, மாசி மாதத்தில் ஒருவன் மூன்று நாட்கள் பிரயாகையில் நீராடுவது, கோடிக்கணக்கான பசுக்களை தானம் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது என்கின்றனர்.
சிவபெருமான், பார்வதியிடம் வாரணாசியின் சிறப்பைக் கூறியுள்ளார். சிவன் எப்பொழுதும் வாரணாசியை விட்டு நீங்குவதில்லை. வாரணா, அசி என்ற இரு நதிகளும் சேரும் இடத்தில் இந்நகரம் இருப்பதால் இதற்கு வாரணாசி என்று பெயர். காசி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நர்மதை நதியும் புனிதம் வாய்ந்தது.
அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறப்புப் புண்ணியம் வாய்ந்தது கயா. கயாசுரன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து வந்தான். அத்தவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். கயாசுரன் முன்பு தோன்றிய விஷ்ணு, வரத்தினைப் பெற்றுக் கொள் என்று கூறினார். கயாசுரன் உடனே, "ஐயனே! எல்லாத் தீர்த்தங்களிலும் மிகப் புண்ணியம் வாய்ந்த தீர்த்தமாக நான் இருக்க வேண்டும்" என்று வேண்டினான். வரத்தினைப் பெற்றுக் கொண்ட கயாசுரன் மறைந்தான். தேவர்கள் சுவர்க்கலோகம் திரும்பினர். கயாசுரன் மறைந்த காரணத்தினால், பூமி வெறிச்சோடிக் கிடந்தது. உடனே விஷ்ணு, தேவர்களை அழைத்து யாகம் நடத்துமாறு கூறினார். கயாசுரனை சந்தித்து, அவன் உடம்பின் மீது யாகம் செய்ய வேண்டும் என்று கூறி, அவனுடைய உடம்பினைக் கேட்குமாறு கூறி அனுப்பினார். கயாசுரன் இதற்கு சம்மதித்த உடன் அவனுடைய தலை உடம்பினின்று கீழே விழுந்தது. உடனே பிரம்மன், கயாசுரனின் தலையற்ற உடல் மீது யாகம் நிகழ்த்தினார். ஆனால், யாகம் தொடங்கிய சில நேரத்தில், உடம்பு அசைய ஆரம்பித்தது. இதற்கு ஒரு தீர்வு காணவேண்டி இருந்தது. தேவர்கள் அனைவரும் ஒரு கல்லில் புகுந்து, அக்கல்லினை கயாசுரன் உடலின் மீது வைத்தால், அவ்வுடம்பு அசையாமல் நிற்கும்; இதன் பின்பு யாகத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும் எண்ணினர். முடிவில் விஷ்ணுவே அக்கல்லினுள் புகுந்து கொண்டார். இதற்குக் காரணம், விஷ்ணுவும் தேவர்களும் எப்பொழுதும் கயாவில் தங்கி இருப்பவராவர்.
இக்கல்லினைப் பற்றி வேறொரு கதையும் வழங்கப் படுகிறது. பிரம்மனின் மகனாகிய மாரீச்சி காட்டிற்குச் சென்று மரம், மலர்களைக் கொண்டு வந்ததால் மிகவும் களைப்புற்று இருந்தான். தன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 12 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கயாசுரன், யாகம், தேவர்கள், உடனே, மீது, யாத்திரை, இதற்கு, தீர்த்த, எப்பொழுதும், விஷ்ணு