அக்னி புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
தர்ம விரதாவும், தன் கணவன் தனக்கு இட்ட சாபத்தி னின்று விடுதலை வேண்டும் என்று கேட்டாள். ஆனால், தேவர்களோ, “மாரீச்சி மிகவும் சக்தி வாய்ந்த முனிவர் என்றும், அவர் இட்ட சாபத்தைத் திரும்பப் பெற முடியாது” என்றும் கூறி, தர்ம விரதாவை ஒரு புனிதமான கல்லாக மாற்றி விடுவது என்றும், தேவர்கள் அக்கல்லில் எப்பொழுதும் தங்கி இருப்பதாகவும் உறுதி அளித்தனர். அந்தக் கல்லானது கயாசுரனின் உடல் மேல் வைக்கப்பட்டது.
யாகம் முடிந்த பின்பு, விஷ்ணு கயாசுரனிடம் எல்லாத் தீர்த்தங்களிலும் மிகச் சிறந்த தீர்த்தமாக கயா கருதப்படும்’ என்று வரமளித்தார். இந்த கயா தீர்த்தத்தில்தான் பாண்டவர்கள் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்தனர்.
ஜோசியம்
அடுத்து அக்னி புராணம் ஜோசியம் என்ற தலைப்பில் பல விஷயங்களை விரிவாகக் கூறுகிறது. உதாரணமாக, திருமணங்கள் சைத்ர, பெளஷ மாதங்களில் நடைபெறக் கூடாது என்றும், மிதுனம், துலாம் என்ற ராசிக்குரிய நாட்களில் திருமணம் நடைபெறக் கூடாது என்றும் யாத்திரை போவதற்கு வெள்ளிக்கிழமை சிறந்த நாள் என்றும், பூசம், அஸ்வினி, ஹஸ்தம், திருவோணம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இல்லாத நாட்களில் மருந்துண்ணக் கூடாது என்றும் சொல்கிறது. நோயில் கிடந்தவர்கள், குளிப்பதற்குச் சனிக் கிழமை சிறந்ததாகும். முதன்முதலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் பொழுது அது செவ்வாய்க் கிழமையாகவோ, சனிக் கிழமையாகவோ இருக்கக் கூடாது. காது குத்தல், புதன் அல்லது வியாழக் கிழமைகளில் நடைபெற வேண்டும். புதிய உடைளை புதன் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் அணியக் கூடாது.
(இதைத் தொடர்ந்து, மன்வந்திரங்கள் பற்றியும் வர்ணாசிரமங்கள் பற்றியும் பிராயச்சித்தங்கள் செய்வது பற்றியும் அக்னி புராணம் பேசுகிறது.)
விரதங்கள்
ஒரு வாரத்தில் குறிப்பிட்ட திதி, கிழமை, குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட மாதம், பருவங்கள், சூரியன் இருக்கும் உத்தராயண, தட்சணாயன காலங்கள் என்பவற்றை அடுத்துக் குறிப்பிட்ட சமயத்திற்குரிய விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. கார்த்திகை, சித்திரை அஸ்வினி மாதங்களிலும் வரும் சுக்கிலபட்சம் முதல் நாள் பிரதமை, பிரம்மனுக்குரிய நாளாகும். அன்று பிரம்மனை வழிபடுவது நன்று.
இரண்டாவது நாளன்று (துவிதியை) பூக்களைத் தின்று, இரண்டு அஸ்வினிகளையும் வணங்க வேண்டும். இவ் விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அழகிய உடலையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவர். கார்த்திகை மாதம், சுக்கிலபட்சம் துவிதியை திதியில் யமனை வழிபட வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்போர் நரகலோகம் செல்லமாட்டார். இந்நாளில் பலராமனையும் கிருஷ்ணனையும் துதிக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 13 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், வேண்டும், தர்ம, கூடாது, குறிப்பிட்ட, கிழமை, பிரம்மனை, பற்றியும், கணவனின்