புதுக் கவிதைகள் - கரையேறி வந்த கடல்
- ஜெயந்தி கண்களில் பட்டு மறைகிறது புறக் காட்சிகள் கரையோரமாய் அலைகளில் நனைந்து விளையாடும் சிறுவர்கள் நிச்சலனமாய் ஆகாயம் எட்டிப் பார்க்கும் நண்டுகள் மறுபடியும் மணலுள் மறையும் ஆர்ப்பரிக்கும் கடல் ஆழத்திலிருந்து கொண்டுவருகிறது அமைதியை நனைய விரும்பாத என்னை ஓயாது அழைக்கும் அலைகளில் அமிழ்ந்து ஆழ நான் போக எனக்குள் கடல். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரையேறி வந்த கடல் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -