புதுக் கவிதைகள் - காத்திருப்பு
- ஜெயந்தி கான் ஆசை மிகக் கொண்டு உருவாக்கினேன் தோட்டத்தை நெடிது உயர்ந்தன மரங்கள் பூத்துச் செடிகள் குலுங்க பறவைகளுக்காய் ஏங்கினேன் அண்டைவீட்டார் தோட்டங்களிலெல்லாம் அவற்றின் இனிய கூச்சல் ஏனோ வரவில்லை என் தோட்டத்திற்கு ஒரு பறவையும் நம்பிக்கையிழந்து விடாமல் காத்திருக்கிறோம் நானும் என் திருஷ்டிப் பொம்மையும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காத்திருப்பு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -