புதுக் கவிதைகள் - அன்னியமாய்...
- மீனாசந்திரா அன்னியமாய் உணர்வது புகுந்த வீட்டிற்குள் மட்டுமல்ல அந்த வீதிக்கும், ஊருக்கும் தான் அடுத்தடுத்த நாட்களில் சினேகமாய் வீட்டிற்குள் வந்து பேசும் முகங்கள் கடந்து போகையில் சன்னல் வழியே பார்க்கும் முகங்கள் கோலம் போடுகையில் வாசலில் நின்று பார்க்கும் முகங்கள் நட்புடன் சிரிக்கும் சில அவசரமாய் பார்த்துத் திரும்பும் சில வெறித்த பார்வையுடன் சில பொருத்தத்தை அளவிடும் சில அன்னியமாய் உணர்வது புகுந்த வீட்டிற்குள் மட்டுமல்ல அந்த வீதிக்கும், ஊருக்கும்தான்...! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்னியமாய்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - முகங்கள், வீட்டிற்குள்