புதுக் கவிதைகள் - மழைக்காலம்
- ஸ்ரீஷங்கர் வெளிச்சம் குறைந்த அறையின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க பார்வையில் தெரியும்படியாக மழை பெய்துகொண்டேயிருக்கிறது திவலைகள் சிதறி சில்லிட்டுப்பரவும் குளுமையோடு காண்பதாய் உறைந்த சுவர்கள் விரிகிறது பேசிக்கெண்டிருந்த உன் நேற்றைய மௌனம் இம்மாலையின் புதிர்த்தன்மையில் முகம் தொலைத்தாய் மலைகள் சாம்பல்நிற வெளியில் மிதந்தலைகிற இந்நேரம் உனதறையில் என்னவாயிருக்கிறாய் உன் கால்களுக்கிடையில் பயணிக்க இப்போது துவங்கிவிட்டிருக்கிறது காலம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மழைக்காலம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -