புதுக் கவிதைகள் - என்னவளே...
- ஆர். பெல்சிங்ராஜ் பொன் நகையை நீ கொண்டு வரவேண்டாம் புன்னகையை கொண்டு வந்தால் போதும்! பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம் பண்பாடு நிறைய கொண்டு வந்தால் போதும்! வந்தால் போதும்!! வலம் வரவாகனங்கள் நீ கொண்டு வர வேண்டாம் வாழ்க்கை பாதையிலே நாம் நடக்க நல் வழிகளை கொண்டு வந்தால் போதும்! அழகு தேவதையென நீ நடந்து வர வேண்டாம் வருத்தத்தில் ஆறுதல் தரும் இனியவளாய் வந்தால் போதும்!!! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்னவளே... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - கொண்டு, போதும், வந்தால், வேண்டாம்