புதுக் கவிதைகள் - மெய்யெழுத்தில்லா...
- எஸ். பிரியா மெய்யெழுத்தில்லா என் மென்மைத் தோழியே பெண்ணே உன்னிடம் மட்டும் அப்படியென்ன ஒரு ஈர்ப்பு விசை உன்னுள் தொலைத்த என் பார்வையை இன்னும் நான் தேடுகிறேன் விழி ஜன்னலில் கணையாழி நீ கொடுத்து கனவுகளைத் தூண்டிவிட்டாய் கவிதை எழுத கரு போதாமல் நானல்லவா தவிக்கிறேன் நிழலைக் கூட வெறுக்கிறேன் நீ என்னுடன் இருக்கும் பொழுது சான்றோர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழில் அதிக எழுத்துக்களை உருவாக்குங்கள் என்னவளை வருணிக்க எனக்கு வார்த்தைகள் போதவில்லை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெய்யெழுத்தில்லா... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -