புதுக் கவிதைகள் - இதுவரை...
- யாஸ்மின் இதுவரை... அறிந்திருந்தேன் உன் கண்கள் பேசுவது உண்மையென்று... இப்பொழுதுதான் புரிந்து கொண்டேன் உன் இதழ்கள் பேசுவது மட்டுமே வார்த்தையென்று... இப்பொழுது, உன் மூச்சுக்காற்று என்னிடம் முணுமுணுத்துக் கொண்டாலும் எதையும் கேட்கத் தோணவில்லை. எல்லாம் பொய்மாயைக்குள் பொசுங்கி என் மெய் உருவத்தையும் அழித்துவிடுமோ என்ற பயத்தில்... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதுவரை... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -