புதுக் கவிதைகள் - மானுடம்
- ஆர். கண்ணாகாந்தி எத்தனை கற்பனை வாழ்க்கை நிலையில்லா உலகத்திலே எத்தனை சோகம் வாழ்க்கை மரணமென்னும் வேலையிலே வாழ்க்கை வாழத் தெரியாமல் மரணம் உறவை மதிக்க தெரியா மானிடம் வருவார் எல்லாம் நிலையில்லை வாழ்க்கை எங்கே முடியும் எனத்தெரியவில்லை ஆயிரம் பொய்கள் எதற்காக? இந்த மானுட ஜீவராசியில் ஆயிரம் மதம், ஜாதி எதற்காக? வாழ்க்கை நிலையை மறந்து சாவதற்கா ஜனனம் என்பது எதற்காக? - வீண் சதையை உண்டு வாழ்வதற்கா? மரணம் என்பது எதற்காக? - மிருக தன்மையை மண்ணில் புதைப்பதற்கா? உயிரில் எத்தனை சிந்தனை உயிராய் ஒருத்தியை பார்த்ததுமே வாழ்க்கை என்பது இதுதானா - வெறும் வம்ச வழியை பெருக்குவதற்கு மானிடமே நீ மெய்பொருளானால் பிம்பத்தை என்முன் காட்டிவிடு மானிடமே நீ அடிமை தானா? வெறும் பணம் உன்னை வதைக்கிறது. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மானுடம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - வாழ்க்கை, எதற்காக, என்பது, எத்தனை